Friday, October 22, 2010

"கோடு...,"



ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாய்
ஒரேயளவில்...
ஒட்டாமல்..!!

அதேயளவில் அடுத்தடுத்து
ஒன்றையொன்று...
பாராமல்..!!

கிடைமட்ட கோட்டின் மேல்
வரையப்பட்ட பரவளையப்
புள்ளிகள்...
இதழ்கள்..!!

செங்குத்துக் கோட்டில்
சேர்ந்த முக்கோணம்...
நாசி...!!

என் தலை தாங்கும்
இடித் தாங்கி...
மயிர்கள்...!!

பக்கத்திற்க் கொன்றாய்
பாதியாய் விடப் பட்ட
அரைவட்டம்...
காது...!!

மேலிருந்து கீழ்
சமபங்காக்கும் கோடு...
உதர விதானம்...!!

இடமிருந்து வலம்
இரண்டாய்ப் பிரிக்கும்
நேர்க் குத்துக் கோடு...!!
இரண்டையும் இணைக்க
கிறித்துவ அடையாளம்..!

பெருந்தனத்தில் ஒரு
பிதாகரசு தேற்றம்..!

அடிவயிற்றில் ஒரு
அரைக் கோளம்..!

அதற்கு மேலே
சிறு வட்டம்..!
வியந்துப் பார்க்க...!
விடிவெள்ளி...!!
பிறை நிலா..!!!

செவ்வகத்துள்
சில சாய் சதுரம்..!
சேர்ந்தாற்ப் போல்
சில நாற்கரம்..!!

சில கோடுகளை
இணைக்கும் இட வலம்..
சில கோடுகளை கடக்கும்
மேல்கீழ் தளம்.
புள்ளிகளின் நீட்சி...
கோடுகளாய்...
புரிகிறதா தோழா..!?

2 comments:

Chitra said...

வித்தியாசமான வர்ணனை. :-)

தமிழ்க்காதலன் said...

மிக்க நன்றிக்கா...