Wednesday, June 01, 2011

"கட்டி அணைத்தல்"



கட்டி அணைத்தல்.....
கட்டி அணைத்தல்???

ஆழ்மனதின் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை
அள்ளி எடுத்து பொங்கும் அன்பின் நுரை

சொல்ல முடியா உணர்வுகளை
சொல்லிவிடத் துடிக்கும்
தேகத்தின் தியானம்.

கரங்களால் பேசப்படும்
கருத்துப் பரிமாற்றம்.

காதோடு சொல்லப் படும்
அன்பின் இரகசியம்.

இதயத்தின் உயிரோசைகள்
இடம் மாறும் இன்பம்.

ஆசைகள் வட்டமடிக்கும்
ஆரவல்லித் தோட்டம்.

முரண்பாடுகளை முற்றுப்புள்ளி
முத்தமிடும் போர்க்களம்.

அன்பை அன்பு ஆதூரமாய்
அரவணைக்கும் மனிதாபிமானம்

சொல்லால் சொல்ல முடியாக்
காதலின் அடையாளம்.

குழந்தையின் உணர்வு மொழி
தாயின் பாச விளக்கம்

உயிரின் பிறவிக்கு காமம்
நடத்தும் கரகாட்டம்

விழிகளின் வியப்புக் குறிகளுக்கு
விளக்கம் தரும் அடைப்புக்குறி

இரட்டைகளின் சங்கமத்தில்
ஒற்றையை பிரசவிக்கும் காதல்

உயிரையும் உடலையும்
இனம் காட்டும் காலக்கண்ணாடி.

தன்னம்பிக்கைத் தரும்
தாய்மையின் அன்பு

நல்லறிவின் அடையாளம்
நல்லோரின் மூன்றாம் கை.

இனியேனும் உன்னை.......???     

3 comments:

நிலாமதி said...

கரங்களால் பேசப்ப்படும் கருத்துப் பரிமாற்றம்....
......கட்டி அணைக்கலாம் உரிமையோடு .

Kayathri said...

சொல்ல முடியா உணர்வுகளை
சொல்லிவிடத் துடிக்கும்
தேகத்தின் தியானம்....................arumai nanbare!!

Kayathri said...

சொல்லால் சொல்ல முடியாக்
காதலின் அடையாளம்......அருமை.கவிஞரே.