Saturday, May 26, 2012

”தமிழ்க்குடில்” விழா அழைப்பு

எம் அன்புக்குரிய வலைப்பூ நட்புகளுக்கு இதயம் கனிந்த இனிய வணக்கம்,

அன்னை தமிழுக்கு தொண்டு செய்யும் அரிய வாய்ப்பாகவும், நமது தமிழ் சமூகத்துக்கு மறுமலர்ச்சியை கொடுக்கும் வாய்ப்பாகவும் முகநூலில் எம்மால் துவங்கபட்ட ”தமிழ்க்குடில்” குழுமம் ஓராண்டு நிறைவு செய்வதை ஒட்டி, 

நிகழும் திருவள்ளுவராண்டு 2043, வைகாசி மாதம் 28 ம்நாள், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10, 2012) அன்று சென்னையில் குரோம்பேட்டையில் “தமிழ்க்குடில் ஆண்டுவிழா” நடத்த ஏற்பாடு செய்யப்படுள்ளது என்பதை பெருமகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதுசமயம் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக...

திரு.கவிஞர். புலமைபித்தன் (திரைப்பட பாடலாசிரியர்) அவர்கள்,
திரு.கவிஞர். அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அவர்கள்,
திரு.சிலம்பொலி.செல்லப்பா (தமிழ் ஆய்வாளார்) அவர்கள்,
திரு.முருகு இராசாங்கம் (பத்திரிக்கை ஆசிரியர்) அவர்கள்,
திரு.கவிஞர். இரவா.கபிலன் (தமிழ் ஆய்வாளர்) அவர்கள்,

ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளார்கள் என்பதை தெரிவிக்கிறேன்.

மேலும் விழாவில் தமிழ்க்குடில் அங்கத்தினர்களின் “கவியரங்கம்” மற்றும் பட்டிமன்றம் நடக்க உள்ளது.
கவியரங்க தலைப்பு : தமிழரின் வாழ்வியலில் அகமும், புறமும்.
பட்டிமன்ற தலைப்பு : திருக்குறளில் விஞ்சி நிற்பது அறமா? பொருளா? இன்பமா?

 தாங்களும், தங்கள் குடும்பமும் நட்பும் சூழ வருகை தந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

விழா அழைப்பிதழ் :  

என்றும் அன்புடன்,
உங்கள் வரவை எதிர்நோக்கும்,
-தமிழ்க்காதலன்.