Thursday, April 14, 2011

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"


கண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட
எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர
குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும்
இல்லத்தில் சுகமும் இனிதே தங்கிட

வாடிய முகங்களில் மகிழ்ச்சி மலர்ந்திட
குறுகிக் குனிந்தவன் நெஞ்சம் நிமிர்ந்திட
வறுமைத் தொல்லை வாட்டம் போக்கிட
தலைமுறைத் தாண்டியும் தமிழன் வாழ்ந்திட

நதிகளில் புதுப்புனல் பாய்ந்து களம்
யாவும் கட்டுக்கதிர் மலையொத்த முகட்டில்
நலம் யாவும் மங்கலமாய் நம்வீடு
வரவேண்டி வந்தது இந்த புத்தாண்டு  





இனிப்புடன் புத்தாடை போர்த்தி உவப்புடன்
உளமார வாழ்த்தி சுற்றமும் நட்பும்
நலம் காண நல்லதொரு விருந்து
நாம் சமைப்போம் தமிழுலகு அமைப்போம்.

வந்திருக்கும் "கர" ஆண்டை கரம்
குவித்து சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.
உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் இனிதே
இன்பம் பெருகி வளமோடு வாழ

வாழ்த்தும் அன்பன்
-தமிழ்க்காதலன்.

13 comments:

நிரூபன் said...

தலைமுறைத் தாண்டியும் தமிழன் வாழ்ந்திட//

வணக்கம் சகோ... கவிதையில் இந்த வரிகள் தான் பூடகமாய் கருத்தைச் சொல்லி நிற்கும் அழகான வரிகள்..

தலைமுறை..வம்ச ஆட்சி கலைந்து தமிழன் வாழட்டும்....

பல தலை முறைகளைத் தாண்டியும் தமிழன் வாழட்டும்.. என இரு பொருள் சொல்கிறது.

வாழ்த்துக் கவிதை... அருமையாகவும் இருக்கிறது, சந்த நடையிலும் அமைந்துள்ளது.

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோ.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துகள் நண்பா....

MANO நாஞ்சில் மனோ said...

வழக்கம் போல் உங்கள் கவிதையும் எக்ஸலன்ட்....

Prabu Krishna said...

சித்திரை திருநாள் வாழ்த்துகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை அருமை...
என் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்...

தமிழ்க்காதலன் said...

வாங்க அன்பு நிருபன்... வணக்கம். உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Chitra said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)

தமிழ்க்காதலன் said...

வாங்க மனோ.. அன்புடன் வாழ்த்துகள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க பலே பிரபு. உங்களுக்கு என் அன்பு புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க கவிதை வீதி சௌந்தர். நலமா..? உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழ்க்காதலன் said...

என் அன்பு அக்காவுக்கு, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Anonymous said...

அருமை.வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக் கவிதை... அருமையாக இருக்கிறது...

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.