Wednesday, December 10, 2014

நெற்கதிர்..!


கணினி வரையும் நெல்மணிக் கதிர்
கண்ணுக்கு விருந்தா கடும்பசிக்கு விருந்தா
புண்ணுக்கு மருந்து புனையலாம் கணினி
மண்ணுக்கு விருந்து விளைதல்

கணினித் திரையிலா..? எருது பூட்டும்
ஏர்முனைக் கிழிக்கும் நிலத்தின் மட்டும்
கூர்முனை அமிழ்ந்தும் குளம்படி பட்டும்
சேர்தனை அடிக்கும் உழவர்தம்

கூட்டம் எதிர்கொள் இயற்கைத் தாக்கம்
கூடுமோ ஒருவரி மேற்கோள் இட்டும்
காடும் கழனியும் கணினியில் போற்றி
ஆவதென்ன ஆனதென்ன நாட்டில்

உழவர் வர்க்கம் பிழைக்க வைக்கும்
உண்மை நிலைதான் உருவாகா வரைக்கும்
உனக்கும் எனக்கும் உயிர்நடுக்கம் பெருக்கம்
வயிற்றுச் சுருக்கம் காணா

வரைக்கும் வாழ்வின் அடிப்படை புரியா
நிலைக்கும் தாழ்மை அடைந்தே கற்கும்
கடைநிலை அறிவை கழற்றி வைப்போம்
உழவர் வாழ்க்கை உயர்த்துவோம்.