Tuesday, October 12, 2010

"பொழுது".


விழும் பொழுதுகள் வீணாய்....! எனக்குள்
எழும் கேள்வி இலக்கில்லா  கணையாய்..!!
ஈழம் தொலைத்த தமிழனாய்....! தொண்டைக்குள்
விழுங்கும் துயரம்....!! துளிர்விடும் விழியில்.
=================================================
புலம் பெயரும் மனிதன் பூர்வீகம்
வலம் வரும் உணர்ச்சிக்  காதலாய்...!
நிலம் தொடும் உதட்டில் மண்முத்தம்..!!
கலமேறும் வேளையில் கடைசிப் பார்வை...
=================================================
தான்பிறந்த மண் பிரியும் வலி....!!
தண்ணீரில்  தடயமற்று விழுந்து தொலையும்
கண்ணீராய்  எண்ணம் சிதறும் என்னுள்..!!
வான்  அளந்த வள்ளுவமறியா  வேதனை..!!!
=================================================
பிறப்பிறப்புக்கு இடைப்பட்ட பெரும் பொழுதை
உறவு  விழுங்கும்  வாழ்க்கை கசக்க
துறவு மேலா..? உதிரத்துறவு மேலா?
மறக்கும் நினைவுகளில் மறிக்கும் பொழுதுகள்.
*******************************************************

4 comments:

Chitra said...

அருமையான கவிதை .

அன்புடன் மலிக்கா said...

வரிகளும் வார்தைகளும் அருமை..

அப்படியே வந்து நம்ம பொக்கிஷ தேவதையை பாருங்க..

http://niroodai.blogspot.com/2010/10/blog-post_12.html

தமிழ்க்காதலன் said...

வாங்க சித்ரா அக்கா.., எப்படி இருக்கீங்க..? உங்கள் கருத்துக்கள் என்னை உற்சாகப் படுத்துகின்றன. தொடருங்கள் ஆதரவை. நன்றி.

தமிழ்க்காதலன் said...

முதல் முறை வருகை தந்த மலிக்காவுக்கு என் வணக்கங்களுடன் நன்றியையும் தெரிவிக்கிறேன். தங்கள் கருத்துரைக்கு நன்றி.