Monday, February 28, 2011

"பிறந்த நாள் வாழ்த்து"


அரியும் சிவனும் விரும்பி அரும்பிய
ஆரமுதே...! அழகே..! பனித்துளி பளிங்கழகே..!
முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..!
முன்னோர் உறை முதூராம் முள்ளுக்குறிச்சியில்

எம்குலத் துதித்த கொழுந்தே..! குலவிளக்கே..!!
எம்மனை செழிக்க எழுந்தப் பேரழகே..!!
எம்முன்னோர் செய்தவத்தின் எழிலார் கலைவடிவே..!
எமக்குவகை தந்த இளஞ்சுடரே...! குலமகளே..!!

இயற்கை எழிலாடும் நெல்லும் கரும்பும் 
இருபுறம் செழித்திருக்க வரப்பு வயலோடும்
வாய்க்கால் வழியோடும் வளம் கொழிக்கும்
நீர்வளம் நிறைந்த நாடெங்கும் காடு.



காலம் தந்த கருணையே..! களிப்பே..!!
கடவுள் சக்தி காத்து நிற்கும்
குறுஞ்சிரிப்பே..! நலன்கள் யாவும் மேவி
நாளும் செழிக்க நல்லன யாவும்

சிறக்க,- சீறும் சிறப்பும் பெற்று
பாரும் ஊரும் பாராட்டும் பண்புடன்
வீடும் குலமும் தழைக்கச் செழிப்பாய்..!
விருந்தோம்பி தமிழின் பெருமைக் காப்பாய்.

 

"அரிகரப்பிரியா...!" பதினாறு வகை பேறுடன் 
அரிகரன் புகழ் நிலைக்கும் வண்ணம்
ஆயுள் முழுதும் நிலைத்தப் பொருளோடும்
நீடித்த புகழோடும் வாழ வாழ்த்துகிறேன்.   



குறிப்பு : அண்ணன் மகள் "அரிகரப்பிரியா" வின் இரண்டாவது பிறந்த தின வாழ்த்து மடல். பிறந்த நாள் - 23.02.2009.      

15 comments:

Chitra said...

அண்ணன் மகள் "அரிகரப்பிரியா" வின் இரண்டாவது பிறந்த தின வாழ்த்து மடல்.


......எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ்.கே said...

குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க்கை இனியதாக அமையட்டும்!

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான கவிதை வாழ்த்துகள்....
நானும் மனமார வாழ்த்துகிறேன்....

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வாழ்த்து

தமிழ்க்காதலன் said...

வாங்க அன்பு சி.பி.செந்தில்குமார், நலமா..? உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

தமிழ்க்காதலன் said...

எனது அன்பு நாஞ்சில் மனோ, வாங்க, உங்களின் அன்பு வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. நலமா..? எப்படி இருக்கு பஹ்ரைன்..?

தமிழ்க்காதலன் said...

அன்பு தோழர் எஸ்.கே வாங்க, வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா..,

தமிழ்க்காதலன் said...

எனதன்பு சகோதரிக்கு, வாங்கக்கா, நலமா..? எங்க போயாச்சு..? காணல... உங்கள் வாழ்த்துக்கு எமது நன்றி. நம்ம வீட்டு வாண்டுகளையும் விசாரித்ததா சொல்லவும்.

செல்வா said...

என் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ..

தினேஷ்குமார் said...

அரிகரப்பிரியாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ்க் காதலன். said...
எனது அன்பு நாஞ்சில் மனோ, வாங்க, உங்களின் அன்பு வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. நலமா..? எப்படி இருக்கு பஹ்ரைன்..//

நிலைமை அப்பிடிஎதான் நீண்டு கொண்டே போகிறது மக்கா....
குழந்தைக்கு என் அன்பின் முத்தங்களை கொடுத்து விடுங்கள்....

தமிழ்க்காதலன் said...

அன்பு தம்பி கோமாளி செல்வாவுக்கு, வாங்க. உன் அன்பான வருகைக்கு நன்றி.

தமிழ்க்காதலன் said...

அன்புத் தம்பி தினேஷ், உன் வருகைக்கு நன்றி.

தமிழ்க்காதலன் said...

அன்பரே, மனோ... உங்களின் கருத்துக்கும், பதிலுக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அரிகரப்பிரியாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.