Monday, November 01, 2010

" பூத்தூவு...!"

என் சிந்தனை சிதைத்து
எண்ணங்களை அரித்து
அத்துமீறும் உன் மீதான
என் காதல்.

என் உணர்வுகள் தின்று
கறையான் புற்றாய் வளரும்
காதல் தினம் இரை கேட்கிறது...!
உயிர் இளைக்கும் ....
என் மனதால் யோசிக்க
முடியவில்லை....!

சிதைந்து கொண்டிருக்கும் என்
செல்கள் தின்று தீர்க்கும்
உன் காதல்...!
இன்னும் கொஞ்சநாள்...
அரித்துக்கொண்டிரு...!
ஆயுள் முடிந்து விடும்.

உணர்வுகளில் உட்கார்ந்து
நினைவுகள் அழிக்கும் உன்னால்
நிகழட்டும் என் தற்கொலை...!
சுருக்கு கயிறாய்...
உன் தாவணி என்
கழுத்து அணைக்கட்டும்...!

உன்னை அணைக்க முடியா என்
சீவனை அணைக்கும் தாவணியில்
என் காதல் சமர்ப்பிக்கிறேன்.

நிதம் நீ கொன்றது அறியா
உலகம் உண்மை தெரியாது
பிதற்றும்  என் பிணத்துக்குப் பின்னால்....
"தற்கொலை" என்று.

கலைந் தவிழும் உன்
கருங்கூந்தல் மறைத்தேனும்
கண்ணீர் சிந்து...!
என்னை உள்ளத்தில்
புதைத்துவிட்டு...
மார்மீது பூத்தூவு..!
என் கல்லரை மீது
உன் கடைசி மாலை...!
*********************************

16 comments:

தினேஷ்குமார் said...

தற்கொலை
நின் தாய்
உனக்கு
நினைவில்
இல்லையோ
காதல்
கரம்பிடித்து
சாகத்துனிந்தாயோ
பிறப்பை யோசி
பிரிவில்லாமல்
வாசி
காதல் சிலுவைகள்
களைந்து போகும்...........

பத்மா said...

உன்னை அணைக்க முடியா என்
சீவனை அணைக்கும் தாவணியில்
என் காதல் சமர்ப்பிக்கிறேன்.

இது அருமை ..
கல்லறை மட்டும் வேணாமே

'பரிவை' சே.குமார் said...

Kavithai romba arumai.

Chitra said...

கலைந் தவிழும் உன்
கருங்கூந்தல் மறைத்தேனும்
கண்ணீர் சிந்து...!
என்னை உள்ளத்தில்
புதைத்துவிட்டு...
மார்மீது பூத்தூவு..!
என் கல்லரை மீது
உன் கடைசி மாலை...!


....காதலின் தோல்வி, சாதலில் தான் முடிய வேண்டுமா?

DREAMER said...

முதல்முறை உங்கள் கவிதையை வாசிக்கிறேன். நெஞ்சை தொட்ட கவிதை, அதுவும் கடைசி பத்தியில் எழுத்துத்திறன் அபாரம்..! வாழ்த்துக்கள் நண்பரே..!

-
DREAMER

போளூர் தயாநிதி said...

enkirunthu intha kathalai kadan petreer ithayaththai allava kollai kontana.
parattugal.
polurdhayanithi .blogspot.com

M.Kalidoss said...

பூத்தூவி வாழ்த்துகிறேன்.

தமிழ்க்காதலன் said...

இந்த வலைப்பூவின் முதல்பூ (கருத்து) உதிர்த்த அன்பர் தினேஷ்க்குமார் வாங்க, தொடர்க உங்கள் அன்பும் ஆதரவும்.

தமிழ்க்காதலன் said...

வாங்க பத்மா.., உங்கள் அன்பின் பிரியம் ஏற்கிறேன். நிச்சயம் மாற்றம் வரும். மாற்றிக் கொள்வோம். கருத்துக்கு மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

அருமைத் தோழர் குமார் வாங்க, உங்க உடல் நலம் எப்படி இருக்கு? கவனித்துக் கொள்ளுங்கள். அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

சித்ராக்கா.., வாங்க. என்னக்கா சகோதரப் பாசம் உங்களை இப்படி கேட்கத் தூண்டுகிறதோ? மிக்க நன்றி. வருகைக்கும், கருத்துக்கும். தொடருங்கள்.

தமிழ்க்காதலன் said...

எமது வலைப்பூவின் மகரந்தங்களில் தங்கள் கனவுகள் பதித்த ( ட்ரீமர் ) அன்பருக்கு வணக்கம். தொடர்ந்து வாருங்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

அன்பர் போளுர் தயாநிதிக்கு வணக்கம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. என்னங்கப் பண்றது? எல்லாம் அந்த கடங்காரிக்கிட்ட தான்... அவள காதலிக்கப் போய்.... இப்போ பாருங்க... உங்ககிட்ட கடங்காரனாய் ...நான்.

தமிழ்க்காதலன் said...

வாங்க காளிதாஸ் ஐயா, உங்கள் ஆசியை... தலைவணங்கி ஏற்கிறேன். உங்கள் அன்பு என்றும் தொடர வேண்டுகிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. சந்தோசமுங்க....

போளூர் தயாநிதி said...

kathalai sumaiyaga yen karutha vendum sugamaga unarungal
polurdhayanihi

போளூர் தயாநிதி said...

நிதம் நீ கொன்றது அறியா
உலகம் உண்மை தெரியாது
பிதற்றும் என் பிணத்துக்குப் பின்னால்....
"தற்கொலை" என்று.
appothakilum therinthu kolvaro?ummai.
polurdhayanithi