Sunday, January 16, 2011

”திருவள்ளுவர் தினம்”


கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்” - ஒளவை.  

*******************************************************************************

தமிழின் நாடி பிடித்துத்
தமிழரின் நாதம் பிரித்து
வாழ்வியல் புரட்டிய வள்ளுவமே...!
மனித வாழ்வின் மகத்துவம் யாவையும்
மகாநுணுக்கமாய் மூன்றில் அடக்கித்
தத்துவங்கள் கடந்த தாத்பரியமே...!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது..!
சீர்கள் குறைந்தாலும்
பொருட்சிறப்பு குறையாது…!
ஒன்றே முக்கால் அடியில் 
உலகளந்த ஓங்குதமிழ் அது...!

சங்கம் வளர்த்தோர் சாடியபின்
அவ்வை அங்கம் வகித்துச்
சங்கப் பலகையிலேறிய
சத்தியத் தமிழ் அது...!
சத்திய சோதனைக்குப் 
பின்னொளிர்ந்த தங்கத்தமிழ் அது...!

திராவிடத்தின் மதிநுட்பம் பேசிய தீந்தமிழ் ...!
பொய்யாமொழியாய்த் தெய்வப்புலமையாய்ப்
புரவலர் போற்றும் பைந்தமிழ்...!

அறத்துப்பால் இயற்றி உம் ஆறாவதறிவையும்
பொருட்பால் இயற்றி உம் யதார்த்தத்தையும்
இன்பத்துப்பால் இயற்றி உம் மாண்பையும்
இவ்வுலகின் மடியில் தரிக்க விட்டவரே...!

தைமகளின் வருகையை..
தமிழர்களின் மகிழ்ச்சியை..
அருவடையின் ஆர்ப்பரிப்பை..
உம் பிறந்தநாளாய் உலகம் கொண்டாடிட..
உவகையுடன் நானும்..
பொங்கல் வாழ்த்துகளுடன்
உமக்குப் பிறந்தநாள் வாழ்த்தும்....!

******************************************************************************

தைமகள்



புழுதிக் காற்றில் பொழுதுகள்
கழனியில் எங்கள் காளைகள்
காலையும் மாலையும்
களைபறிக்கும் வயல்திருத்தும்
கன்னியர் ஆடவர் பெண்டிர்
உழைத்து உழைத்து 
உலகம் செழிக்க
உணவு சமைக்கும் 
உழவனின்...
உள்ளக்களிப்பை உலகுணர
வந்துவிட்டாள் தைமகள்...!
வளம்சேர்க்கும் பெருமகள்...!
வாசலில் பொங்கும் பொங்கலில்
இன்பம் பொங்கும்..
இந்த உலகமெங்கும்..
உழைப்பைச் சிறப்பு செய்யும்
உன்னதத் திருநாள் - இது
உழவர் பெருநாள்...!

அவர் வாழிய...! அவர் குலம் வாழியவே...!

குறிப்பு: திருவள்ளுவர் தினத்திற்குத் தமிழ்க்காதலனின் சமர்ப்பணம்!

5 comments:

'பரிவை' சே.குமார் said...

Kavignarey...
Kavithaigal Arumai. indliyil inaiththu ottum pottachu... ungalukkum MATTUP Pongal vazhththukkal.

நாவலந்தீவு said...

பொங்கல் நல்வாழ்த்துகள்

சுவடுகள் said...

அறத்துப்பால் இயற்றி உம் ஆறாவதறிவையும்
பொருட்பால் இயற்றி உம் யதார்த்தத்தையும்
இன்பத்துப்பால் இயற்றி உம் மாண்பையும்
இவ்வுலகின் மடியில் தரிக்க விட்டவரே...!

very nice.wishing u the same and thanks a lot.'G'its great really i proud of u,and think about ur skill....superb. keep progress.

சுவடுகள் said...

உன்னதத் திருநாள் - இது
உழவர் பெருநாள்...!???????????

is it? any way ungal kanavu nanavaakattum,varum kaalangalil eppadi nikazhnthaal nandru.eniya pongal vaazhththukkal

செல்வா said...

//சங்கம் வளர்த்தோர் சாடியபின்
அவ்வை அங்கம் வகித்துச்
சங்கப் பலகையிலேறிய
சத்தியத் தமிழ் அது...!
சத்திய சோதனைக்குப்
பின்னொளிர்ந்த தங்கத்தமிழ் அது...!
/

உண்மைலேயே திருக்குறள் தமிழர்களின் அடையாளம் அண்ணா ..!