Tuesday, August 18, 2009

குட்டி தேவதை

என் சிந்தனையை கூட
நிறுத்தி வைக்கும்
உன் சின்ன விழிப்பார்வை..!!!
சீறிபாயும் மின்னலை
சிறைபிடிக்கும் கலையை
எங்கே கற்றன உன் கண்கள் ?..!
**********************
கடவுளுக்கும், கருணைக்கும்
உன் கண்களே சாட்சி.
எரிமலையும் குளிர்ந்துவிடும்
எழில் கோலம் நீ..!!
எந்த நந்தவனமும்
பிரசவிக்காத மலர் நீ…!
*************************
அணுசக்தி அமைதிகொள்ளும்
உயிர்சக்தி நீ…!
ஆற்றல்கள் ஒளிந்துகொள்ளும் ஆழி இருள் …
உன் கருவிழி...!!
**********************************
பேதமுற்று கிடக்கும்
பெரிய மனிதருக்கு
அமைதி போதிக்க வந்த
அழகு நீ..!
**********************************
அல்பிரேட் நோபெலுக்கு-
நீ பிறந்திருந்தால் …
இந்த உலகம் அழிந்திருக்காது …!
நியூட்டன் உனைக்கண்டிருந்தால்
ஆப்பிள் கண்டு அதிசயித்திருக்கமாட்டான் ...!
அலெக்ஸ்சாண்டர் உன்னை பார்த்திருந்தால்
அமைதி கொடி ஏந்தியிருப்பான்...!
**********************************

3 comments:

சிவாஜி சங்கர் said...

நியூட்டன் உனைக்கண்டிருந்தால்
ஆப்பிள் கண்டு அதிசயித்திருக்கமாட்டான் ...!

Good

nenjammarapathillai said...

hai, i am sathiya how r u?yours works are very
nice,attractive,perfect and touching.keep it up

nenjammarapathillai said...

mathipirkureyavarukku,urs works are very nice,attractive,perfect and touching. so keep it up