Wednesday, September 04, 2019

உயிர் தாகம்...!



கரும்பாறை ஊறும் கனித்தேன் தேடும்
கருங்குயில் ஊரும் குகைதான் மூடும்
காரிருள் சேரும் கவின்மாலை தோறும்
மாரிருள் போக்கும் பூவின்மால் ஊறும்

தேன்கனிச் சாரும் தெவிட்டா நல்லமுத
சோறும் கலந்து தமிழூட்டும் பொழுதாக
மாறும் காலம் மாதூட்டும் மதுவாக
தேரும் ஊணும் உயிரும் மெதுவாக

பொழியும் பூம்பெழில் பூவையுள் சொரியும்
எழில்மிகு தூறல்கள் எம்மிதயச் சாரல்கள்
சொற்சுவை மொழியும் இதழ்கடை வழியும்
பற்சுவை பைந்தமிழ் கற்சுவை கலந்தேன்

அற்புத மாயிருந் தமிழோ..! வனப்பில்
பொற்பத பூண் கழலோ..! கதுப்பில்
வார்ப்புட செழிப்பில் தேர்அது அசப்பில்
போர்படை தோற்கும் விழிப்படை அசைவில்

முத்து மழை பொழியும் ஆழியுள்
முத்த மழை சொரியும் ஆழ்மனம்
கத்தவோ கழலவோ வியலா தேகணம்
மொத்த மாய்திகழ் முத்தத் திருவிழா..!  

2 comments:

'பரிவை' சே.குமார் said...

மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா...
தொடரட்டும் உன் தமிழ்...

காயத்ரி வைத்தியநாதன் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு இதயச்சாரலில் தமிழ்ச்சாரல். மகிழ்ச்சியும் வாழ்த்தும்.