Tuesday, September 10, 2019

விழி...!



விண் உலாவும் விண் மீன்கள்
விழி குளத்து நீந்தும் மீன்கள்
விழித்து விழித்து இரவை அளக்கும்
வினாடி கழியும் காலம் பொழுதாக

நில்லாது வேறெங்கும் செல்லாது தொங்கும்
தூலங்களும் தூலங்களின் மூலங்களும் தாங்கும்
தாளங்களும் அதிர்வுரும் அண்டமும் அதிலூரும்
கோலம் அலைவுறு காலமும் நிகழ்த்தும்

உருவுருச் செயலும் பதிவுற பொலிவுரு
மறுவுரு மாற்றமும் நிகழ்வுற சுழலும்
கருவுரு காலம் கனிவது காண்பது
பிரிதொரு பிறவியா கும்மாயா மயக்கம்

மெய்யுறு மனமுயிர் முறுக்கி முறுக்கி
தன்மையுள் தன்மை கொண்டு தம்முள்
பன்மையும் ஒருமையும் தாமாக்கிக் கொளவும்
உண்மையுள் உய்யும் உயிரே..!

No comments: