Wednesday, September 04, 2019

”உயிர்த்தெழு...!”



கல்லில் நார் உரிக்கும் கலையோ
சொல்லில் மனம் கரைக்கும் சிலையோ
முள்ளால் முள் எடுக்கும் முறையோ
முப்பால் தனை கொடுக்கும் வரையோ

மாமதம் மறைக்க மாமூலம் உறைய
மாமகம் உதிக்க மாமாயை கரைய
தாமதம் தவிர்க்க தாமாக விரைய
அமுதம் உயிர்க்க அன்பை பொழிய

உள்ளுள் உறைந்த உள்ளம் எழுந்து
உள்ளம் கலந்து உள்ளும் கலந்து
எண்ணும் எண்ணம் என்னுள் விழுந்து
கல்லும் உயிர்க்க கள்ளது பொழிந்து

உயிர் பித்தினை உதிர்த்து உயிர்பித்த
உயர் வினை விதைத்து உயர்வினை
பயிர் வித்தென பயிற்று வித்தெனை
துயர் விட்டெழ துயில் பட்டெழ

மயில் வந்து குயில் ஆகும்
மனம் தந்து உயிர் தூவும்
தனம் தந்த பொன்னுரு மேவும்
கணம் தோறும் கவிதந் தேனே.




No comments: