Sunday, September 15, 2019

”மூலம்...!”



ஊழியுல ஊழ்தனை உயிர்நாடி உற்றகால்
தாழியுள் சூழ்வினை தனைநாடி பெற்றதால்
ஆழ்நிலை உறக்க மேருமலை தண்டில்
தாழ்நிலை உய்யும் தருணம் கூண்டில்

தூசுகள் திரண்டுத் துலங்குத் தூலம்
ஆழியுள் அமிழ் துயில் கோலம்
நாழியால் அளந்து மோழியாய் பிளந்து
கோழியாய் கூவும் கூற்றத்து – கூடும்

மலம் மூன்றுள் மயங்கு நிலைகொள்
மனம் வந்துட் புகும் கலம்கொள்
நாளது சுழலும் கோளது ஆட்படும்
பூணது பூண்டுளம் உய்த்துத் துய்த்திட

திறவுகோள் தொலைத்து பூதத்துள் புகுந்த
அரவம் அலைந்து அமிழ்ந்து தொலைந்து
மறதியுட் புகுந்த மாய்மாலத் தொடர்ச்சி
உறவுள் பிணைந்து ஊராய் விரிந்து

தானாய் நிலத்துள் நீந்தும் மீனாய்
காடும் மேடும் கடந்து நாடாய்
ஓடும் ஆறாய் பெருகும் – ஊழின்
கூடும் கூடல் தேடும்.



3 comments:

'பரிவை' சே.குமார் said...

உன் கவிவரிகள் சிறப்பு நண்பா.

Yarlpavanan said...

படிக்க மறக்காதீர்கள்
நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

Yarlpavanan said...

அருமையான பதிவு