Saturday, September 03, 2011

”தமிழ்க்குடில்..”



என் அன்புக்குரிய வலைப்பூ தோழமைகளுக்கு தமிழ்க்காதலனின் இனிய வணக்கம், 


உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை பகிந்து கொள்ளவே இந்தப் பதிவு. தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் நலம் பயக்கும் விதமாகவும், வளம் சேர்க்கும் விதமாகவும் மூன்று மாதங்களுக்கு முன்பு முகநூலில் “தமிழ்க்குடில்” என்ற பெயரில் தனிக்குழுமம் ஒன்று தொடங்கி உள்ளோம்.


இத்தளத்தின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் வகையில் பல பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கவிதை, கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் என பலக் கோணங்களில் தமிழை வளர்க்கவும், தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்லவும், இந்த தலைமுறையை தமிழில் பேசவைக்கவும் முயற்சிகள் எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.


எமது உறவுகளான இணையதள தோழமைகள் பலரை அதில் நானே இணைத்து விட்டிருக்கிறேன். கொஞ்சம் அதைக் கவனிக்கவும். இன்னும் நிறையப் படைப்பாளிகளை அதில் சேர்க்கவும், தமிழுக்கு தொண்டு செய்யவும் எண்ணம்.


அதற்கான முகவரி இணைப்பை இங்கு தருகிறேன்.


https://www.facebook.com/groups/209486265759191/


இந்த இணைப்பை கிளிக் செய்து தாங்கள் இந்த குழுமத்தில் சேர விருப்பம் தெரிவிக்கலாம். உடனடியாக சேர்த்துக் கொள்ளப் படுவீர்கள்.


தமிழில் அக்கரையும், ஆர்வமும் உள்ள அத்தனை நல்லுங்களையும் வரவேற்கிறேன். 


* முக்கியமாக நல்லப் படைப்பாளிகள் அனைவரையும் வரவேற்கிறேன். இதயச்சாரலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகைத் தரும் அத்தனைப் பேரையும் கேட்டுக் கொள்கிறேன்.


உங்களின் படைப்புகளுக்காகவும், பங்களிப்புகளுக்காகவும் காத்திருக்கிறேன்.


போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெறும் நபருக்கு வீட்டு முகவரிக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்களை எதிர்ப்பார்த்த வண்ணம்..,
-தமிழ்க்காதலன். 

10 comments:

Unknown said...

மாப்ள எனக்கு இந்த நாட்டுல மூஞ்சி புத்தகம் ஓபன் ஆகாது என்ன பண்ண!

பிரேமி said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள். உங்கள் குழுமத்தில் நான் ஏற்கனவே உறுப்பினர் என்பதை பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.... தமிழித்தொண்டு செவ்வனே நடை பெற வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள்...

சே.குமார் said...

உன் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் நண்பா....

தமிழ்க்காதலன் said...

மச்சி (விக்கியுலகம்) கவலைப்படாதே.., மூஞ்சி தெரியாத நாட்டுல வாலாட்டுனா இப்படித்தான் வாழ்க்கை கோளாறா மாறி மனசுல உணர்ச்சி பாலாறா ஓடும். ம்ம்ம்ம்

இப்ப என்ன பண்ணலாம் சொல்லு மச்சி..?

தமிழ்க்காதலன் said...

வணக்கம் சந்தோஷி, தொடருங்கள் உங்கள் ஆதரவை.

தமிழ்க்காதலன் said...

மிக்க நன்றி தஞ்சை வாசன்.. தொடருங்கள் உங்கள் தோழமையையும்.., ஆதரவையும்.

தமிழ்க்காதலன் said...

வாங்க மனோ, நீண்டடடடடடடடட இடைவெளிக்கு அப்புறம் இந்தப் பக்கம் காற்று அடிக்குது.
ம்ம்ம்ம்ம்..
சந்தோசம்.

தமிழ்க்காதலன் said...

என் பிரியமான தோழனுக்கு வணக்கம், உன் வருகை எனக்கு மன நிம்மதி.