Thursday, September 22, 2011

”மொழித் தவம்”




தாய் கொண்டு வந்த தவத்தை
நோய் தின்னும் சாபமாய் வாழ்க்கை
வாய் தின்னும் உணவுக்கு செலவாகும்
காய் தின்னும் குறை அறிவு


வாழும் கலை மறந்தக் கூட்டம்
வாடிக் கிடக்க மறுவழித் தேடி
நாடிக் கிடக்கும் மனம் தினம்
ஓடிக் களைத்து தேடிக் கொண்ட


அருமருந் தாமது அருபத்து நான்கு
இழந்து விட்ட இழிநிலை நமக்கு
இனிப் பொறுக்க ஏதுமில்லை,- இழந்தவன்
இழிப்படும் நிலை மாற்றத் தேடல்


தொடர்கிறேன் பலகலைக் கொணர்கிறேன் தமிழுக்கு
தொலைந்த யாவும் மீண்டும் யாண்டும்
செழித்து வளர சேவைதான் தேவை
செய்யவே செப்பனிட இறை அப்பணியிட


முடியும் கலை யாவும் முடிக்க
மீண்டும் மண்ணில் தழைக்க வேண்டும்
மாண்டவர் போல் வாழாது உயிர்ப்பில்
மாதவ நீரூற்றி நிலம் செழிக்க


வேண்டுகிறேன் நம் கலை சிறக்க
வேண்டி யதுதரும் வேடன் கந்தன்
வேண்ட வேண்டிக் கொண்டாடத் தமிழ்
வேண்டி தமிழினம் அலைமோதும் வேளை


வருக வருக அய்யன் தமிழ்த் 
தருக தந்துப் பெருகப் பெருக்கும்
அறிவு நிறைக நிறையச் செறிவு
தமிழ்ச் சிறக்க தவம் கொள்க.




No comments: