Wednesday, September 21, 2011

”பூதம்...!”




மலரில் தங்கி மதுவில் ஊறி
மயக்க முற்ற தேனீயின் இன்பம்
மாய உலகம் தரும் மாவின்பம்
மதி மயக்கம் தரும் அனுதினம்


சுழல் கழல் கழல கழலும்
உழல் மனம் உழல உழலும்
தழல் மேனித் தழால் தழலும்
குழல் படரும் யாழ் குழலாம்


தினைக் கலையும் தினம் வாழ்க்கை
வினைக் கலையும் இனம் வேட்கை
தனைக் கொள்ள தனம் தந்த
உனைப் போல் குணம் ஈந்த


பிறவி யாண்டும் உறவில் வேண்டும்
துறவி வேண்டும் தூயநலம் பேணல்
மறவி நீங்கி மருகி நின்று
மறவோன் பிறவான் பிறவி தோறும்


பூதத்தில் பூதம் பொதிந்த பூதத்தில்
பூதம் மிக மிகும் பூதம்
பூதத்தொரு பூதம் வைத்து புக
பூதம் புறப்பட அகப்படும் பூதம்.

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை வழக்கம் போல் அருமை மக்கா...!!!

சே.குமார் said...

நல்லாயிருக்கு...