Friday, December 31, 2010

ஓ...! என் பிரியமே...!


ஓ...!
என் பிரியமே...!

நீ என் பாடுபொருள்
நான் உனைப் பாடும் பொருள்

நீ என் கவிதை
நான் உன் உட்பொருள்

நீ என் பல்லவி
நான் உன் சரணம்

நீ என் வீணை
நான் உன் ராகம்

நீ என் சுருதி
நான் உன் சங்கீதம்

நீ என் நடனம்
நான் உன் அபிநயம்

நீ என் மௌனம்
நான் உன் மொழி

நீ என் கனவு
நான் உன் விழி

நீ என் உணர்வு
நான் உன் உணவு

நீ என் பரிவு
நான் உன் பாசம்

நீ என் சுவாசம்
நான் உன் திலகம்

நீ என் நிசம்
நான் உன் நிழல்

நீ என் பிரிவு
நான் உன் உறவு

நீ என் மெய்
நான் உன் பொய்

நீ என் கர்வம்
நான் உன் அகந்தை

நீ என் வினை
நான் உன் விதி

நீ என் இணை
நான் உன் துணை

நீ என் வாழ்வு
நான் உன் நலம்

நீ என் நிலம்
நான் உன் விதை

நீ என் சொந்தம்
நான் உன் பந்தம்

நீ என் பாதம் 
நான் உன் பாதை

நீ என் சித்தம்
நான் உன் நித்தம்

நீ என் சுயம்
நான் உன் சுயம்பு

நீ என் பிரபஞ்சம்
நான் உன் நிலா

நீ என் பாதி
நான் உன் முழுமை

நீ என் பக்தி
நான் உன் முக்தி

நீ என் "நான்"
நான் உன் "நீ"

நீ என் "சக்தி"
நான் உன் "சிவன்"

நீ என் "பரம்"
நான் உன் "புறம்"


ஓ...!
என் ஆனந்தமே...!

உன்னை நினைத்தே...
உயிர் ஒடுங்குகிறேன்...!!

ஏற்றருள்...
என் சீவனை.



6 comments:

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கமலேஷ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

தமிழ் எப்படி இப்படியெல்லாம்...
எவ்வளவு பெரிய கவிதை...
கண்டிப்பா நீங்க இன்று என்னிடம் சொன்னது போல் நுனிப்புல்லோ அடிப்புல்லோ மேயவில்லை. மொத்தமாக மேய்ந்து வந்தேன்... அருமை... அருமை... அருமை....

Meena said...

நீண்ட அழகான கவிதை. உங்கள் தமிழ் புலமைக்குப் பாராட்டுக்கள்

Kayathri said...

Nee Tamizhuku kidaitha parisu...tamizh unaku iraivan kodutha parisu......