Tuesday, December 14, 2010

"மனச் சிதறல்....!"

என் பிரியங்கள் பிழிந்து...
தாகங்கள் தணியும் பேரன்பே...!
என் தேகத்திரவத்தில் வண்ணமெடுத்து
வரையப்பட்ட ஓவியமே...!!

என் எண்ணப் பூக்களில்
உன் நினைவுக் குழலுறிஞ்சிகள்...
அன்புத் தேன் அருந்துகின்றன...!!

என் மூளையை மொய்க்கும்
உன் உணர்வுத் தேனீக்கள்...
தேகத் தேனடையில்
உன் நினைவுகள் சேமிக்கின்றன...!!

ஒளியினும் வேகமாய்
ஊடுறுவுகிறேன் உன்னை...!
நீ காணும் யாவிலும்...
என் பிம்பங்கள்...!!
பிரிய மனமில்லாமல்....
பின்பற்றுகிறேன்..
நிழலாய் நான்...!!

கண்ணாடியில் தெரியும் உன் கண்களில்...
கசியும் என் காதல்...!
உன் எழில் கூட்டும்...!!

காற்றில் அலையும் கற்றைக் குழலை
ஒற்றைத் தலை அசைப்பில்...
சரி செய்யும் அழகில்..
சரிந்துப் போகிறேன்...!
செல்லமே...!!

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

kavithai arumai

Chitra said...

கண்ணாடியில் தெரியும் உன் கண்களில்...
கசியும் என் காதல்...!
உன் எழில் கூட்டும்...!!

...Beautiful!

செல்வா said...

//காற்றில் அலையும் கற்றைக் குழலை
ஒற்றைத் தலை அசைப்பில்...
சரி செய்யும் அழகில்..
சரிந்துப் போகிறேன்...!
செல்லமே...!! //

அருமையா இருக்கு அண்ணா ..!!

'பரிவை' சே.குமார் said...

Beautiful varigal...
arumaiyana kavithai...