Monday, December 13, 2010

"நீயாகவே இரு"...!


நீ என் பலம்.
மனதின் உரம்.
நீ இரும்பாகவே இரு...!
நான் இராசத்திராவகம் ஆகும் வரை...!!

சிந்தனையில் சூடேற்றி... சூடேற்றி
நியூரான்களில் நெருப்பை பற்ற வைக்கிறேன்.
அது ஹைப்போதலாமஸ் வரை காற்றாய்ப் பரவுகிறது.

பிட்யூட்டரி முதல்....
பித்தப் பை வரை... உன்
பிம்பங்களின் சாயல்கள் சேமிக்கிறேன்...!

கொதிக்கும் குறுதியால்...
புடைக்கும் நரம்புகளில்
சதைக் கிழியும் சப்தம்...
நாளமில்லாச் சுரப்பிகளை
நடுங்க வைக்கிறது...!!

என் காதலோ....!
புடைக்கும் நரம்புகளை விறைப்பாக்கி
சுருதி சேர்க்கிறது...!!

தசை நார்களுக்கும்
தாகம் எடுக்கிறது...!
இரத்தம் குடித்து
"கண்ணீர்" வெளியிடுகின்றன...!!

மூளையின் வெப்பத்தில்....
விழிகளில் "வியர்வை"...!!
உணர்ச்சிகளின் மோதலில்
தடித்த இதழ்கள்....
துடிக்க மறந்தன...!!

விறைத்துப் போன
விரல்கள் பார்த்து...
கண்ணீர் வடிக்கிறது
பேனா....!
"கவிதைகள்"...!!

உப்புகள் ஆவியாகும் வரை
உடற்சூடு ஏறட்டும்...!
அதுவரை பொறு.
அடக்க முடியாவிட்டாலும்...
அடக்கு.

பிறப்புக்கும் இறப்புக்கும்.... இடையில்
காதல் எழுதுகிறேன்...!!
என் காதலை
எழுதி முடிக்கும் வரையாவது...
உன் மௌனம் கலைக்காதே...!!

கல்லறைக்கு முன் காதல் சொல்லாதே.
பிரேதத்தின் மேல் விழுந்து புரளாதே.
என் கடைசிச் சொட்டுக் காதலையும்
உன் உயிர் குடிக்கும் வரை....
காத்திறு....!!!

5 comments:

Chitra said...

பிறப்புக்கும் இறப்புக்கும்.... இடையில்
காதல் எழுதுகிறேன்...!!
என் காதலை
எழுதி முடிக்கும் வரையாவது...
உன் மௌனம் கலைக்காதே...!!

.....அருமையான வரிகள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//என் காதலோ....!
புடைக்கும் நரம்புகளை விறைப்பாக்கி
சுருதி சேர்க்கிறது...!!//

//மூளையின் வெப்பத்தில்....
விழிகளில் "வியர்வை"...!!
உணர்ச்சிகளின் மோதலில்
தடித்த இதழ்கள்....
துடிக்க மறந்தன...!!///

இந்த வரிகள்... ரொம்ப அசத்தலா இருக்கு...
பகிர்வுக்கு நன்றி.. :-)

'பரிவை' சே.குமார் said...

அருமையான வரிகள்... ரொம்ப அசத்தலா இருக்கு.

Anonymous said...

பிறப்புக்கும் இறப்புக்கும்.... இடையில்
காதல் எழுதுகிறேன்...!!
என் காதலை
எழுதி முடிக்கும் வரையாவது...
உன் மௌனம் கலைக்காதே...!!

.....அருமையான வரிகள்

ஹேமா said...

எப்படிப்பட்ட வார்த்தைகள்.கோர்த்தெடுக்கும் விதம்.உணர்வோடு வரும் கவிதைகள்.அற்புதம் !