Sunday, December 12, 2010

"மழையில்...!"


குடை இருந்தும் நனைகிறேன்...
குளிர்கால மழையில்....!
மனதிற்கு இதமாய் மழை...!!
உடலுக்கு இதமாய் குடை...!!
மனமா...?
உடலா...?
மழையா...?
குடையா...?
வென்றது.... மனம்.
வெட்கி நின்றது குடை...!
சந்தோசத்தில் நான்...!!
சலதோசத்தில் ...உடல்...!!
*********************************************************
  

 




உன்னைச் சுற்றி....
என் நினைவுகள் பின்னும் வலையில்...
சிக்கிக் கொண்ட "சீவனாய்" நான்..!!
********************************************************



பிறைக்கு பின்னாலிருக்கும் இருளாய்...
என் பிரியமே...! நீ இருக்கும்
காரணம் என்ன....?

இப்படிக்கு,
பிறையின் வெளிச்சத்தில்...
பிழைத்திருத்தும் எழுத்தாளன்.
**********************************************************
 

 


மௌனமே...!!
என் மரணம்
உன் மடியில் நிகழட்டும்...!
உன் மீதான அன்பை ...
சாம்பலாய் மிச்சம் வைத்து செல்கிறேன்.
தேவையிருப்பின் "திருநீராக்கு"...!!.
*********************************************
***********************

11 comments:

Unknown said...

வணக்கம்.

Unknown said...

//சந்தோசத்தில் நான்...!!
சலதோசத்தில் ...உடல்...!!//
//என் நினைவுகள் பின்னும் வலை//
//பிறைக்கு பின்னாலிருக்கும் இருளாய்.//
//பிழைத்திருத்தும் எழுத்தாளன்.//
அருமையான வார்த்தைகளின் ஊர்வலம்..

தினேஷ்குமார் said...

இப்படிக்கு,
பிறையின் வெளிச்சத்தில்...
பிழைத்திருத்தும் எழுத்தாளன்.

பிழைதிருத்த புறப்பட்ட தோழா உமக்கு எம் வந்தனம் வணக்கத்துடன்

அனைத்தும் அருமை .........

Philosophy Prabhakaran said...

வசீகரமான வார்த்தைகள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வணக்கம்
கவிதைகள் அருமை...

நிலாமகள் said...

எல்லாமே 'ஜம்'முன்னு எழுதிட்டிங்க... வாழ்த்துகள்!

ஹேமா said...

மழையில் காதல் சாரல்...சோகமானாலும் சுகம் !

தமிழ்க்காதலன் said...

உங்கள் அன்புக்கு நன்றி பாரதி...

தமிழ்க்காதலன் said...

தோழருக்கு வணக்கம். உங்களின் பிரியங்களில் பிழைத் திருத்திக் கொள்கிறேன். தொடர்ந்து வந்து உயிர் தாருங்கள்.

தமிழ்க்காதலன் said...

மிக்க நன்றி பிரபாகர். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...

'பரிவை' சே.குமார் said...

வசீகரமான வார்த்தைகள்.