Friday, June 17, 2011

"வாசி...!"


வாசிக்கும் நாசிக்கும் வாய்த்த வாய்ப்பாடு
வாசிக்கத் தருகிறேன் வாய்த்த பேருக்கு
பெட்டகத்தைப் பேணும் பேழை வாழும்
நூலிழை வழித்திறக்க வாய் நாசி.

வலமிடம் வாய்த்தப் போதும் ஒருப்பொழுது
ஒருவழி வழியும் மறுவழி மறுபடி
வழியும் வாசத்தலம் வாசிக்க வகுத்த
வழிமுறை இட்டுக் காட்ட வாசி.

வலம் தொட்டுப் பாயும் வளி
வாயுப்பை மிக்க வழிந்து வரும்
இடம் தொட்டு கலம் விட்டுப்போம்
காற்றின் குறி ஒரு சுற்று.

இடம் புகுந்து இழைந்தோடி கலம்
மிகுந்து கதவடைத்து மேவும் மேல்
வழித் தாக்கி வலமாக வருமாம்
வாயு வந்த இது மறுசுற்று.

கலைகள் இடவல கணக்கு இருக்கு
கற்றறிந்த பேர்க்கு வாழ்வு இருக்கு
வசமாகாப் பேர்க்கு சவம் இருக்கு
வாசியில் வசிப்போருக்கு சிவமிருக்கு.

வலதுக்கு ஒருப் பங்கு வாங்கு
வாங்கிய வாசியை வகையாய் தேக்கு
தேக்கி நிறுத்த நாலுப் பங்கு
தெருவழி அனுப்ப இரண்டுப் பங்கு

தெரிந்து கொள் தேரைக்கும் தெரியும்
தரை நெளியும் வாசுகி வளியறியும்
நாசி நமக்குண்டு வாசி யாருக்குண்டு
வந்தமர்ந்த பேர்க்கு வகையாக்கித் தருகிறேன்.

வாழ்ந்துப் பார்..! இது கைக்கூட
காலைக் கடன் பட்ட மாலை
இவ்விரு வேளை இனியது அறிவாய்
மற்றது உதவாது மானிடப் பேர்க்கு.   

2 comments:

'பரிவை' சே.குமார் said...

kadinamana varththai pirayogam...
irunthum nalla kavithai..

Anonymous said...

wow