Thursday, June 16, 2011

”இரவல் இரவு.....”




இமைகளற்ற விழிகள்
காணும் கனவுகள்
மனதின் மௌனப்பக்கத்தில்
பூதம் காத்தப் புதையலாய்....

உணர்வுகளை களவாடும்
உணர்ச்சிகள்...!
உள்வீட்டுத் திருடன்
நிரூபிக்கபட முடியா உத்தமனாய்..!!

பருவங்கள் மாறுவது
பழக்கமாகிப் போக
உருவ மாற்றம் புரியாத
உள்ளம் அடைகாக்கும் நினைவுகள்...!

கொஞ்ச கொஞ்சமாய்
உயிரில் கலந்த நஞ்சாய்
மனம் கொல்லும் மரணம்
மௌனத்தை பதிலாய் தந்த வினாடிகள்....!

காற்றில் மணம் பரப்பும்
சுடுகாட்டுப் பூக்களின் 
சுவாசம் கண்டு முகம் 
சுளிக்கும் அறிவின் அடையாளங்கள்....!

மனிதம் தொலைத்து விட்ட
மனித குணம் தேடும்
பிணம் தின்னும் நாய்கள் பின்வாங்குகிறது 
பணம் தின்னும் மனிதர்களிடம்...!

வெட்டியான்களின் வெறியாட்டத்தில்
பிணம் தூங்க ஒரு இரவல் இரவு தேவை...
இப்போது....!!

இந்த இரவும்.......
இரவல் இரவாய்.

No comments: