Thursday, June 02, 2011

"உன்னோடு நான்..."


ஓ.... என் பிரியமுள்ள பேரழகே...!

பாழுமுயிர்ப் போகும்வரை
பாவி உன்னை நினைத்தேங்குதல்
பிறவியின் பயனா..?

வாழும் காலம் யாவும்
வருத்தமுற்று வாடிக் கிடத்தல்
வாழ்வதன் பொருளாமோ...?

தேடிய சொந்தம் நீ
தேவை உன் பந்தம்தான்
தேடல் ஒன்றே தவமா...?

என்னுயிர் நாடிய நல்லுயிர்
நினதென்று நான் சொல்லி
நீ அறிதல் நியாயமோ...?

உணர்வுகள் கூடி கைத்தட்ட
உண்மை மௌனித்து நிற்கும்
உணர மறுப்பாயோ உன்னதமே...?

வெள்ளை மனம் கொள்ளையழகு
வெண்பஞ்சு மேகம் நீ
வெண்ணிலவின் தங்கை நீயோ...?

விரும்பாமலும் அரும்பாமலும்
விளையாட்டாய் விளைந்த நேசம்
விருந்தாய் மருந்தாய் விடைதருமோ...?

விழிகளில் தொக்கி நிற்கும்
விடியல்கள் வினாக்களை தாங்கியபடி
விடிவின்றி விடியும் பொழுதுகள்...

காலத்தின் பந்தயத்தில் நான்
காவல்காரனா..? பார்வையாளனா..?
கலந்து கொள்ளாத பந்தயக்காரனா..?

எதுவாகவோ இருந்துவிட்டுப் போகிறேன்...
எப்போதும் உன்னுடன்...!.      

9 comments:

Kayathri said...

என்னுயிர் நாடிய நல்லுயிர்
நினதென்று நான் சொல்லி
நீ அறிதல் நியாயமோ...?*****

காலத்தின் பந்தயத்தில் நான்
காவல்காரனா..? பார்வையாளனா..?
கலந்து கொள்ளாத பந்தயக்காரனா..?

எதுவாகவோ இருந்துவிட்டுப் போகிறேன்...
எப்போதும் உன்னுடன்...!.superb Tamizh...

S.T.Seelan (S.Thanigaseelan) said...

Hi Good Brother....http://vellisaram.blogspot.com/ please follow me also..

MANO நாஞ்சில் மனோ said...

வழக்கம் போல் தேன்மழை.....!!!

'பரிவை' சே.குமார் said...

Kalakkittey Kanna...

தமிழ்க்காதலன் said...

வாங்க காயத்ரி, வணக்கம். உங்களின் புதிய வருகை எனக்கு புத்துயிர் அளிக்கிறது. நல்ல எழுத்துக்களை ஆதரிக்கும் உங்களின் உயர்ந்த குணத்துக்கு என் பாராட்டுகள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க சீலன். உங்களின் முதல் வருகைக்கு என் நன்றி. விரைவில் உங்களை பின்தொடர்வேன்.

தமிழ்க்காதலன் said...

வாங்க அன்பு மனோ, உங்களின் வரவுக்கும், கருத்துக்கும் என் நன்றி.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு நண்பா, வாப்பா குமார். பாராட்டுக்கு நன்றி.

காயத்ரி வைத்தியநாதன் said...
This comment has been removed by the author.