Friday, December 10, 2010

"இன்னும் எனை ரணமாக்கு..!"


இன்னும் எனை ரணமாக்கு...
என் பிரியமே...!
மரிக்கும் முன் மரணம்
இன்னதெனக் கண்டு
சொல்கிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு...
என் செல்லமே...!
பிறக்கும் வலி....
பிரிவின் வலி....
இனம் பிரித்துக் காட்டுகிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு...
என் காதலே...!
காதலின் ஆழம்....
எதுவரைக்கும்....?
கண்டு வந்து சொல்கிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு...
என் தமிழே...!
துன்பத்தின்....
எல்லையை....தொட்டு
தொல்காப்பியம் செய்கிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு....
என் சகியே....!
சாதலினும் கொடியது...
காதலா...!
காதலினும் கொடியது...
சாதலா...!
பாப்பையாவையும்...
அறிவொளியையும்....
பட்டிமன்றத்தில் சந்திக்கிறேன்...!!

இன்னும் எனை ரணமாக்கு...
என் பிழையே...!
கடலினும் பெரிது...( என் )
காதல் என்பது....
காட்டுகிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு....
என் உன்னதமே...!
இடுப்பு வலியினும்...
இதயவலிக் கொடுமை
இதுவெனக் காட்டுகிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு....
என் சத்தியமே....!
சாகா வரம் சாத்தியமா....?
சத்தியலோகம் சென்று
வருகிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு....
என் பவித்திரமே...!
மீண்டும் ஒரு
கருக்குழிக்குள்...
கருவாகிறேன்....!

இன்னும் எனை ரணமாக்கு....
என் சுகந்தமே...!
உன்னால் நான் பட்ட
வேதனை சொல்கிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு....
என் சொர்க்கமே...!
உனக்கு வராத காதல்...
எனக்கு மட்டும் வந்த
காரணம் கண்டுபிடிக்கிறேன்...!

இன்னும் எனை ரணமாக்கு...
என் சகத்தியே...!
உன்னோடு உணர்வுகளில்
வாழ்ந்துப் போகிறேன்....!

இன்னும் எனை ரணமாக்காமல்...
இப்போதேனும் பிணமாக்கு....!!!

8 comments:

Chitra said...

இன்னும் எனை ரணமாக்கு....
என் சொர்க்கமே...!
உனக்கு வராத காதல்...
எனக்கு மட்டும் வந்த
காரணம் கண்டுபிடிக்கிறேன்...!


.......நல்லா எழுதி இருக்கீங்க.

Anonymous said...

//இன்னும் எனை ரணமாக்கு...
என் சகத்தியே...!
உன்னோடு உணர்வுகளில்
வாழ்ந்துப் போகிறேன்....!//

ம்ம்ம்... நல்லாயிருக்கு. உணர்வு பூர்வமான கவிதை

நிலாமகள் said...

தகிக்கும் எரிமலையாய் ததும்பி வழிகிறது காதல்!

Unknown said...

நல்லா இருக்குங்க...

arasan said...

நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

'பரிவை' சே.குமார் said...

உணர்வு பூர்வமான கவிதை

ஹேமா said...

காதலில் பிணமாக்குவதைவிட ரணமாக்குவதே இறப்பைவிடக் கொடிது.உணர்வோடு ரணமாய் வந்து வலித்தோடுகிறது வரிகள் !

தமிழ்க்காதலன் said...

@ அன்பு சகோதரி சித்ரா,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ ராதை
உங்களின் ரசனைக்கு என் நன்றிகள்.

@ நிலாமகள்
ஆமாங்க,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ கலாநேசன்
உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.

@ அரசன்
எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்

@ சே.குமார்
அன்பு தோழமைக்கு மிக்க நன்றி.

@ ஹேமா
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.