Friday, December 17, 2010

"கள்வனல்ல"....!


இருட்டுக் கடை அல்வாவை
திருட்டுத் தனமாய் தருபவளே...!
திண்டுக்கல் பூட்டு போட்டிருக்கும்
உன் இதயத்தின்...
இரும்புக் கதவு திறக்கும்
தமிழ்க் காதலனின் ஒரு
தமிழ்ப்பாட்டு.

தினவெடுக்கும் என் தோள்களில்
கூர்த்தீட்டிக் கொள் புத்தியை..!
திருப்பாச்சிக் கத்தியை...!!
கள்வன் அல்ல உன் காதலன்
இதயம் திருட....!
திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்.
குடிபுக காத்திருக்கிறேன்...
காதலுடன்.
****************************************************           

7 comments:

Anonymous said...

vadai

'பரிவை' சே.குமார் said...

தமிழ்க்காதலனின் கவிதை காதலாய்...
இருட்டுக் கடை அல்வா மட்டும்தானா?

வினோ said...

தல குடிபுகுந்தா சொல்லி அனுப்புங்க...

Unknown said...

இன்னும் சில ஊர்கள் சேர்த்து இருக்கலாம்... நல்லா கவிதை.

Unknown said...

இன்னும் சில ஊர்கள் சேர்த்து இருக்கலாம்... நல்ல கவிதை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன நண்பரே அல்வாவும் கலவரமும் கலந்திருக்கு கவிதையில்...

சுவடுகள் said...

*கள்வன் அல்ல உன் காதலன்
இதயம் திருட....!திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்.
குடிபுக காத்திருக்கிறேன்...
காதலுடன்.
மிக்க நன்று நண்பரே.நீங்கள் யோசிக்கும் விதம் மெய்யாகவுமே நன்றாக இருக்கிறது