Wednesday, December 01, 2010

"காணாமலே"....!


இனிய என் உறவே........
கண்ணிமைக்கும் காலத்துக்குள்
காணாத உன்மேல் காதல் வர.....
காரணமென்ன......?

நெஞ்சமே.....நீ
நெடும் பொழுதை
அவள் நினைவில் கழிக்க வேண்டிய
அவசியம் என்ன......?

நீ யாரென எனக்கும்....
நான் யாரென உனக்கும்....
எதுவும் தெரியாமலே......!
எழும் வேட்கையின்
மூலம் எது....?

நீ என்பது.......
என் வரையில்........
எதுவாகவுமில்லை.
நீ பெண் .......
என்பது தவிர.....!!

எந்த கோட்டையும்
இதுவரை கட்டாத எனக்கு
"காதல் கோட்டையும்"
கைவரக்கூடுமோ...!?

நெஞ்சை அழுத்தும்
உன் நினைவுகள்....
உன்னை "வல்லினம்"
என்கிறது.

என் இரவை அடைகாக்கும்
உன் நினைவுகள்....
விழிகளில் விழுந்த
"உரோமமாய் உறுத்துகிறது"....!

எங்கோ இருந்து கொண்டு
என்னை உன்வசப் படுத்த
எப்படி கற்றாய்...?
உன் ஈர்ப்பு விசைக்கு
எதிரான என் விசைகள்
காந்தத்தின் முன் இரும்பாய்.......
உன் பக்கமே என்னை
இழுக்கின்றன........!!

புரிந்து கொள்.
பிரியமே........!!
சின்னதான ஒரு அன்பு
அணுகுண்டாய் "என் இதயத்தில்"
துளைக்கும் வண்டாய்
துளையிடுகிறது.

உனக்கென்ன......
உணர்ச்சி ஊமை.... நீ..!
உனக்கும் சேர்த்தல்லவா
எனக்குள் போராட்டம்....!!

நீ பேசும் வரை....
மௌன விரதம்....
வாய்க்கு மட்டும்...!!
உணர்வுகளை கொண்டொரு
"பட்டிமன்றம்"
உள்ளுக்குள்....!

சொல்....!
நீ.........
என்னவளா......?

8 comments:

சுபத்ரா said...

சூப்பரா எழுதிருக்கீங்க :) வாழ்த்துகள்.. தொடர்ந்து நிறைய கவிதைகளை எதிர்பார்த்து.

அன்புடன்
சுபத்ரா :)

செல்வா said...

//எந்த கோட்டையும்
இதுவரை கட்டாத எனக்கு
"காதல் கோட்டையும்"
கைவரக்கூடுமோ...!?//

காதல் கோட்டை படத்த சொல்லுறீங்களா அண்ணா ..?

Anonymous said...

அரேபியா பாலைவன குளிர் காற்று என்னை பாடாய் படுத்த உங்கள் எழுத்துக்கள் என் இதயத்தில் தென்றலாய் ...
தொடரட்டும் ...

வினோ said...

தல அருமை.. பதில் வந்ததா?

THOPPITHOPPI said...

அருமையான வரிகள்

தினேஷ்குமார் said...

அருமையான காதல் கவிதை நண்பரே வாழ்த்துக்கள் விரைவில் காதல் கைகூட

ஹேமா said...

காதல் சொட்டுகிறது கவிதையின் ஒவ்வொரு வார்த்தைகளிலும்.ஏக்கம் !

SangeethaJayaprakash said...

ungal kavithaiyum valliname!