Wednesday, February 26, 2014

மின்மினிகள்....!



மின்மினிகள் கலைந்து கலைந்து அலைந்து
மின்னல் கோடுகள் வரைந்து காட்டும்
இரவின் ஒளி கோலங்கள் சிரிக்கின்றன
உதிராத விண்மீன்கள் உறைந்து கிடக்க

பறந்து பறந்து ஆசை மூட்டும்
பரந்து விரிந்த வான்மீன் பார்த்து
திறந்த வெளியில் சுதந்திரமாய் திரிந்து
கண் சிமிட்டி சிரிக்கும் ஒளிச்சுடர்..!

அடர் இருளை ஒளிவீசி கிழிக்கும்
ஆனந்த பயணம் ஆர்பரித்து எழும்ப
ஒளிவீசும் ஒங்கி உயர்ந்த மரங்களில்
கைவீசி நடக்கும் கண்மணிகள் மின்மினிகள்

இடமும் தடமும் பெயரா ஒளிமீன்கள்
இந்த காட்சி கண்டு நாணி
விழுந்து இறக்கும் விடியல்கள் ஏராளம்
விடிந்த பின்னே இரண்டுமே...!!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... என்னவொரு ரசனை... ரசித்தேன் பலமுறை...

தொடர வாழ்த்துக்கள்...

Yarlpavanan said...

மிக்க நன்று
தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.