Monday, February 17, 2014

”அங்குசம்...!”




அங்குச பயம் அழியாத களிரின்
அறியாமை பிளிறல் வான் கிழிக்க
அங்குசம் ஏந்திய கைகளில் நடுக்கம்
அறிந்தால் நடக்கும் ஆபத்து அறிந்தே

சுருங்கலும் விரிதலும் அறிவுக்கும் மனதுக்கும்
சூட்சும புரிதலில் அடங்கும் தேடலில்
சுருங்கும் ஒன்றே வாழ்வில் அடங்கும்
சூழ்நிலை வகுக்கவோ கடக்கவோ இயன்றது

வாழ்நிலை வகுக்கும் தொகுக்கும் பகுக்கும்
வாழ்தலை அனுபவம் ஆக்கித் தெளியும்
நூதன வழிகள் நுணுக்க முறைகள்
நன்னறிவில் ஏற்றி வைத்து நடமிடும்

அற்புத குவிதல் அழகிய விரிதல்
சொற்பதம் தொகுத்து கற்பத நூலில்
கைவினை ஆக்கும் முற்பத நாளில்
மாமரம் மறைத்த மதயானை தன்னில்

பூமர நிழலில் சாமரம் வீசிடும்
பாமரச் சாயலில் காய்மரம் ஏசிடும்
கனியா அறிவின் சுவடில் காயும்
தனியா தாகம் வாழ்வின் மோகம்

வெஞ்சன சுகமும் வெஞ்சின பகையும்
மிஞ்சின அளவில் அஞ்சுக அஞ்சற்க
வேழம் கொள்மதம் மனம் கொள்க
ஆயிரம் அங்குசம் அடக்கும் நம்மை

தோளுரம் நெஞ்சுரம் நீங்கா இனமடா
தோழமையே..! போர்த்திக் கிடக்கும் சோம்பல்
முறித்தே பூமகள் புதல்வன் நாமென
முழங்கு மனமே முழங்கு.

No comments: