Friday, October 02, 2009

"அதிர்ச்சி..!"


உதிரம் உறைய வைத்து விட்டு
உணர்ச்சிகள் மட்டும்
உடலெங்கும் ஓடவிட்டு
நரம்புகள் தகர்த்தெறிந்து ,-என்
எலும்புகள் உடைத்தெறியும்
உன் பிம்பம் …
விழுந்த என் விழித்திரை
உணர்ச்சி கடத்தா பொருளாய்
உறைந்துபோக …
மின்னல் தாக்கிய மரமாய் ..
உன் எண்ணம் தாக்கிய நான்
உறைந்து போகிறேன் .
விண்வெளி இருட்டுக்குள்
விழி இழந்த
சந்திராயன் போல்
எனக்குள் தொடர்பற்று
தொலைந்து போகிறேன் நான் .

No comments: