Friday, October 02, 2009

"எட்டா சிகரம்...!"




சுற்றி சுழன்றடிக்கும்
சூறாவளியால் …
நங்கூரம் நகர்ந்து ,
தகர்ந்துபோன
கப்பல் …
கட்டுப்பாடிழந்து
கரை ஒதுங்கும்போது
தரை தட்டி …
தானாய் நிற்ப்பது போல்
வாழ்க்கை சூழலில்
சுழன்றடிக்கும் சூறாவளியால்
ஏற்றமிகு எண்ணங்கள் …
ஏக்கமிகு இலட்சியங்கள் …யாவும்
நிசம் தட்டி நிற்கின்றன .

நினைப்புக்கும் நிசத்துக்கும்
இடையேயான இடைவெளி
ஆணுக்கும் பெண்ணுக்குமான
நட்புக்கும் கற்புக்குமான
இடைவேளிபோல் …
இனம் காண முடியா
மென்மை கொண்டிருப்பதால் …
மனம் அடிக்கடி அலைபாய்கிறது .

நினைப்புக்கும்
நிசத்துக்கும் நடுவே
உயிரை உறைய வைப்பதும்
மனதை சரிய வைப்பதும் …
வாழ்க்கைக்கு வாடிக்கையாகிப்போனது .

நினைப்பை சீர்செய்து ,-என்
நிலையை சரி செய்யும் முன்பே
அடுத்தடுத்து … அடுக்கடுக்காய் …
அலைகழிப்புகள் …
அனுபவ வகுப்புகள் ..!!!
தொடர்ந்து வரும்
வாழ்க்கைத் தொடரில்
தொடர்ச்சியாய் வரும்
தோல்விகள் …!!!
ஒவ்வொரு தோல்வியிலும் …தொடரும்
மட்டுமே ..அனுபவமாகிறது .
தொடர் தோல்விகளுக்கு
முற்றுப்புள்ளி..... ??!!.

தொட்டபெட்டா சிகரம் அளவுக்கு
உயர நினைப்பவனுக்கு
உயரம் மட்டும்தான்
கிட்டவில்லை ..!
தொட்டபெட்டாவை போல்
அடுக்குகளுக்கு குறைவில்லை .
அனுபவ அடுக்குகளுக்கு
குறைவில்லை .
உயரம் மட்டும்
உள்நோக்கிப் போகிறது ..!!!

No comments: