Sunday, January 01, 2012

நலம் வாழ...!


எம் இனத்துக்கும் மண்ணுக்கும் ஏதேனும்
எள்ளளவு நன்மையேனும் கிடைக்க,- உள்ளத்து
வெளிச்சம் வெள்ளமாய் பெருக்கெடுக்க உயர்வான
எண்ணங்கள் உதிக்க வேண்டி வாழ்த்துக்கள்.

பள்ளத்து பாய்ந்து மேட்டினில் மிதந்து
நதியென நாமும் துன்பத்தில் பாய்ந்தும்
இன்பத்தில் மிதந்தும் வாழ்வியலில் உழலும்
வசமிழந்த மதிமயக்கம் தெளிந்து சுயம்தழைக்க

இளம்பிள்ளைகள் இனியாவது தெருவில் கையேந்தாமல்
முதியவர்கள் தெருவோரம் ஒதுங்கி கிடக்காமல்
காப்பகங்கள் இல்லாத தேசமாய்,- அன்பு
காக்கும் இல்லங்கள் இனியேனும் அமைய

உள்ளத்து அன்பு சுனையூற்றாய் பெருக்கெடுக்க
உள்ளமதில் உறையும் இறை உணர்த்தட்டும்
இங்கு யாவர்க்குமாம் ஓர் பச்சிலை
இங்கு யாவர்க்குமாம் ஓர் மருந்து

புரிந்து வாழ்வோர்க்கும் வாழ முயல்வோர்க்கும்
நன்நாளாய் அமையும் ஒருநாளை எதிர்ப்பார்த்து...



2 comments:

மகேந்திரன் said...

என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Kayathri said...

அன்பு ஊற்று அனைவரது உள்ளத்திலும் என்றென்றும் நிறைந்திருக்க இறையும், இயற்கையும் துணைபுரியட்டும்...தங்கள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறட்டும்...:)