Monday, August 22, 2011

”கண்ணனுக்கு காதலனின்...!”



கண்ணா..! துவாரகை மன்னா..!!
கனியும் இதயங்களில் காதலாய்
கனியும் கருணைக் காதலனே..!!
கருவிழியால் உலகம் உருட்டும்
கைப்பிள்ளை உன் கடைவாயில்
கைப்பந்தாய் உலகம் சுழலக் காட்டி
மாயா மயக்கம் அறுத்த மாதவா..!!
கடிக்க இனிக்கும் கரும்பே..!
மனம் நினைக்க இனிக்கும் கண்ணா..!!
வெண்ணெயில் உள்ளம் வைத்து
இளகும் உள்ளத்தில் இருப்பதைக் காட்டி
உருகும் உண்மைக்கு வாழ்வளிப்பவனே..!!
வெண்ணை திருடிநீ சொன்ன தத்துவம்
வெள்ளை மனம் இறைவன் ஆலயம்
தூயமனதை இறைவன் தேடுகிறான்
தூய்மைக்கு ஆண்டவனும் அடிமையே..!!
வெண்மையாய் இரு...
வெண்ணெய்யாய் உருகு... அன்பில்
வெண்ணெய் போல் ஒழுகு...
கடவுள் உன் காலடியில்.
அறிந்தேன் அருட்பெருங் கடலே..!!
யாதவக் கன்னிகளின் காதலே..!!
உன் உன்னதத் தத்துவம் உணர்ந்தேன்.
மயில்தோகை காட்டி மயக்கும்
மாயா மயக்கம் தவிர்க்க மறை போதித்தவனே..!
உலக மயக்கம் உணர்ந்து...
உன்னதம் நோக்கி நகர
காலை உயர்த்திக் காட்டியவனே..!
வெற்றிலையில் வீழ்ந்துக் கிடந்து
வெற்றியின் பாதைக் காட்டிய கருணையே..!!
மண்ணை தின்ற மண்ணின் மன்னன்
மாயக் கண்ணன் நீ.
ஆண் பெண்ணாய் அவதறித்து
ஆன்மாவை கரையேற்றும் காந்தம் நீ.
விதிகளை விதித்து விதிகளின் விதியை
விதிகளாள் அறுத்து விதிக்கு விதி செய்த
விளையாட்டுப் பிள்ளை நீ.
அறுவினை யாவும் அறுத்து
மறுவினை மலரச் செய்யும் மாயம் நீ.
மனதாலும் நினைவாலும் வணங்குகிறேன்
ஆன்மாவை அடைக்கல மாக்குகிறேன்.
நல்லறிவும் ஞானமும் வழங்கு.
நல்லத் தமிழ் நாடெங்கும் முழங்கு.
இல்லையும் தொல்லையும் நீக்கி
இம்மையும் மறுமையும் போக்கி
ஏகாந்தம் அளிப்பவா போற்றி..!!
பிறந்த நாள் வாழ்த்துகள்.

3 comments:

kumar.s said...

Excellent...
Super...
Wow...

Chitra said...

விதிகளை விதித்து விதிகளின் விதியை
விதிகளாள் அறுத்து விதிக்கு விதி செய்த
விளையாட்டுப் பிள்ளை நீ.


.... very nice. :-)

Kayathri said...

வெண்மையாய் இரு...
வெண்ணெய்யாய் உருகு... அன்பில்
வெண்ணெய் போல் ஒழுகு...
கடவுள் உன் காலடியில்..........அருமை..