Friday, May 06, 2011

”அன்றிலும் நானும்”



அன்றிலொன்று அலர் மலர் மேல்
அமர்ந்த வண்ணம் ஆடிப் பாடி
ஆழ்துயில் மேவும் அழகு காண
வான்முகில் வந்து சிவிகை வீசும்

நதிமுகம் காண நறுமுகைத் தாவும் 
நறுமுகை முந்த நதிப் பாயும் 
சலசலக்கும் நதியின் அழகில் சிலிர்த்து 
கலகலக்கும் மனம் பளப்பளக்கும் நீர்மேனியில்

மதி மயங்கும் மதி நிழல் 
வண்ணம் கண்டு அலையும் அதனுடன்
பின்னலிட்ட மின்னலில் பின்னிக் கிடக்கும்
பேரழகு மின்னிக் காட்டும் அன்றிலை

சொட்டும் சாரலில் கொட்டும் சுகம்
கொட்டமடிக்கும் இரவில் கொட்டும் பனியில்
வட்டமிடும் எண்ணம் தொட்டுவிடும் தூரம்
வானவில் வாழ்வில் அன்றிலும் நானும்.



6 comments:

பனித்துளி சங்கர் said...

அருமையான படைப்பு

MANO நாஞ்சில் மனோ said...

வழக்கம் போல தமிழ் தேனருவி சூப்பர் மக்கா..

'பரிவை' சே.குமார் said...

Nalla irukkuyya...

Anonymous said...

அருமை

சக்தி கல்வி மையம் said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
நேரம் இருந்தால் பார்க்கவும் ...
http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_10.html

Prabu Krishna said...

அசத்தல்...