Tuesday, August 31, 2010

"ஒரு துளி"..!!


ஆதி யந்த மிலாப்பெரு வெளியில்
ஆழிசூழ் சுடரொளியை...
கண்முன் காட்டும் ஒரு துளி...!

ஒளிக்குவித்து ஒளிக்குவித்து
பளிங்காய் மாறி பரவமூட்டும் ஒரு துளி..!

ஈர்ப்புவிசைக் கெதிராய் தொங்கும்
"திரவத் தோட்டம்".

ஒளிப் பெருக்க, குவிக்க
கற்றுத்தந்த விஞ்ஞான வித்து..!!

கூர்மை யாற்றல் கட்டுறை "அணு ஆயுதம்".

பற்றி யெரியும் பசுந்தீ...
தொற்றச் செய்யும் இரகசியம்.

பரப்பு இழுவிசையால்....
பூமிப் போர்த்தும் பன்னீர்.

பிறப்பு இறப்பு பிறவி குணம்
அறுத்த முதல் உளி..!

கலைந்த கட்டுமானம்...மேகம்.
உடைந்த கட்டுமானம்...நீராவி.
ஒன்றிணைந்தால் "ஒருதுளி".

தனக்கென...தனி குணம், நிறமிலா தொழித்து
செல்லு மிடத்து கொள்ளும்
பிரபஞ்ச இரகசியம்.
பூமியின் புனிதம்.

தாவர தவத்தின் வரம்.
மூன்று கட்டுமானத்திலும்
முகிழ்த்தெழும் "முப்பரிமானம்".
அள்ளக் குறையா "அமுதம்".

பரிணாம வளர்ச்சியின்....
படிமானங்கள்...தொடரும்...
பரிமானம்.

ஆழ்கடலின் ஆரம்பம்.
ஆறு, ஓடைகளின் பெருக்கம்.
குளம், குட்டைகளின் ஒடுக்கம்.

உயிர்களின் தொடக்க முதல்
அடக்கம் வரை தொடர்ந்து வரும்
"தொப்புள் கொடி".

"திரவப் படிகம்"

தொலைவு சுருக்கி,
பிம்பம் பெருக்கும் "குவியாடி"...!!

அளவுகளின் அளவுகோள்...!!
இயற்கையின் கண்ணீ ர்..!
******************************

2 comments:

வினோ said...

அருமை நண்பரே...

தமிழ்க்காதலன் said...

மிக்க நன்றி தோழரே...