Friday, March 07, 2014

”நினைவுச் சுருக்கு....!”

வேறென்ன....
நீயும் நானும் வேறு வேறு
என்றானபின்.........

வேறென்ன......
நீரும் நிலமும் ஒட்டாது
என்ற உன் நியாயங்களுக்கு முன்...

வேறென்ன....
நிழலும் நிசமும்
முரண்பாடான உன் வாதங்களில்...

வேறென்ன....
விருப்பும் வெறுப்பும்
விடாப்பிடியாய் துரத்துகையில்....

வேறென்ன....
இருப்பு கொள்ளா உன்
நினைவுகள் சுமந்து திரிகையில்....

வேறென்ன....
தாயும் நீயும் எனக்கு
வேறில்லை என்றானபின்....

வேறென்ன....
தனித்தனியான எண்ணங்கள்
தவிடிபொடியான வாழ்வில்....

வேறென்ன.....
பிரிதொரு நாளில் - ஏன்
பிரிந்தோமென நினைக்ககூடுமெனில்...

வேறென்ன.....
இலைமறை காயாய்
உன்னாலும் இருக்க முடியுமெனில்...

வேறென்ன....
மனதில் மதில்சுவர் எழுப்பும்
மகத்தான உன் சிந்தனைகளில்....

வேறென்ன....
ஒட்டும் உறவும்
ஒட்டியும் ஒட்டாத உறவுக்குள்...

வேறென்ன.....
எங்கோ வெறிக்கும் பார்வைகள்
நிலம் நோக்காது எனில்....

வேறென்ன....
நீயேனும் நலமாக
நானற்று போவதில்.....

வேறென்ன....
பெரிதாய் இங்கே
நினைவுகள் தாண்டி......

3 comments:

தனிமரம் said...

வேறென்ன வார்த்தையில் கவிதை அழகு! வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

பலதும் நினைத்தால் அப்படித்தான் தோன்றுகிறது - வேறென்ன...?

'பரிவை' சே.குமார் said...

வேறென்ன...
இங்கே சொல்லிய
வார்த்தைகளைத் தாண்டி
நான் சொல்ல....

அருமை நண்பா...