உரத்துப் பேசும் என் உறவே ... கனத்துப் பேசினாலும் ., கனைத்துப் பேசினாலும் சாகடிக்கப் பட்ட சத்தியம் சாகாது உள்ளிருந்து உறுத்தும் உண்மை உணராது ..... உன் கட்டை வேகாது ....., உள்ளேக் கசியும் ஈர நினைவுகள் காயும் உன் கருவிழிக்கு மருந்தாகும் என் காதல் சிந்தும் கண்ணீர் ...!! சத்தியம் சாகாது . ஊர்த் திட்டும் , உன் அப்பன் திட்டும் வாய் மட்டும் பேசிய நீ ..., முற்றும் மறந்தனை வாழ்வூட்டும் நம் காதல் . எண்ணுந் தோறும் நெஞ்சம் முட்டும் .... எண்ணக் குமுறல் நுமக் கில்லையோ எம்போல்...!!! தாவணி தாண்டி சேலையாய் வாழ்வை வார்த்தெடுக்க எப்படி முடிந்தது ..? சாவடி... சுற்றித் திரிந்தேன் நானடி . யாரடி உன் மனம் கலைத்தாரடி ..? குலைத்தார் நம் குலம் , குடும்பம் , நிலைத்தார் " கூனியாய் " நினைவில் , சதியால் .... " யாது வளைத்தார் " வையகத்தில் நானறியேன் ...?.
பிளவுற்ற வெடிப்புக் கிடைக் கசியும் உதிரத் திரள் வழியே மின்னும் சூரியன் சுட்டெரிக்கு மென்னிதழ் வாடியே நெக்குருகும் எச்சில் பூசும் உன் நாவுக்காய் . **************************************************** உலர்ந்து சருகாய் உதிரும் ரோமத்தில் கடந்தகால காதலின் மிச்சங்களும் மிளிறும் அழிந்து வரும் ரேகையூடே அழியுமென் நினைவுக் காப்பக சிலிக்கான் சில்லுகள் . ***************************************************** குரோமோசோம் களுக்கிடை குந்தி யிருக்கும் நின்னுருவம் வார்த்தெடுக்கும் என்மரபணு எனது வாரிசாய் நின்னை ...!! எனக்கு கதவடைத்த நின்தந்தை வாயடைக்கும் , பிள்ளை . ********************************************************* உயிர் கலந்தபின் உடல் பிரித்த பாவம் ... புரியும் .. !! என் வேதனை . நின் தந்தை போல் இன்னும் யாராரோ ...? நினைத்துப் பார்த்து பயனிலை பின்நாளில் . **********************************************************
7 கோடி மனிதம் நிறைந்த தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிப்போரே .........!! சற்றே உங்கள் மனதை என்னிடம் திருப்புங்கள் . " குரங்கு கையில் கொள்ளிக் கட்டையாய் " தமிழகம் ......., பற்றி எரிவதைக் காட்டுகிறேன் . # இலவசம் தந்தே இருக்கும் மக்களை .... ஏமாற்றும் , உங்களின் உள்நோக்கம் "
வாக்கு வங்கி ", கோட்டைக்குள் வசிப்பதே குதூகலம் என்றே ஓட்டு வேட்டைக்கு தயாராகும் ...., உங்கள் தந்திரம் . # ஒரு ரூபாய் அரிசி தந்தீர் ..., எதன் அடிப்படையில் ., விவசாயப் மூலப் பொருள்களின் விலை வீழ்ச்சியின் காரணமா .? நடைமுறைக்கு சாத்தியமில்லாத சலுகைகள் எதற்காக ?. தினக் கூலி , உரம் , விதைகள் , நீர்ப் பாசன குத்தகை , டீசல் இப்படி எல்லாம் விலை ஏறி நிற்க .. அரிசி மட்டும் 1 ரூபாய் என்றால் .., நியாயமா ?. இதன் விளைவுகள் எண்ணிப் பார்த்தீர்களா ?. # ஒரு ரூபாய்க்கு அரிசி என்றதிலிருந்து ......, சந்தைகளில் கிடைக்கும் அரிசி இரகங்கள் இருமடங்கு விலை ஏற்றம் பெற்றுள்ளன . 1 கிலோ 16 ரூபாய்க்கு விற்ற அரிசி ... இன்று 32 ரூ . ........ எந்த மாற்றமுமில்லாமல் . உப்பு முதல் பருப்பு , மிளகாய் , மஞ்சள் , என அத்தனை மளிகைப் பொருட்களும் ...., 3 மடங்கு விலையேற்றம் . சமையல் எண்ணெய் 2.5 மடங்கு விலை ஏறியிருக்கிறது . # அரசாங்க செலவில் .......... இலவச தொலைக்காட்சிப் பெட்டி தந்தீர் , ஆனால் ... கேபிள் இணைப்பை ஏன் கிடப்பில் போட்டீர் ?. சொந்த குடும்பம் பிழைக்கவா ? தழைக்கவா ?, அதற்கு எதற்கு அரசாங்கப் பணம் வீணாக வேண்டும் ? # ஒரு இணைப்புக்கு ரூ .100 முதல் ரூ .150 வரை வசூலிக்கப் படும் வாடகை பணம் , தமிழக மொத்த இணைப்பையும் சேர்த்துப் பார்த்தால் ..., சுமார் 2 கோடி . மொத்த வாடகைப் பணம் ரூ .300 கோடி . ஒவ்வொரு மாதமும் இவ்வளவு பெரிய தொகை இப்போது யாருக்குப் போய்க் கொண்டிருக்கிறது ?. இந்த வருமானம் அரசுக்கு தேவை இல்லையா ?.. ஏன் இதை அரசு இழக்க வேண்டும் ?. # மதுபான சில்லரை விற்பனை மூலம் " சில்லரைப் " பார்க்க துணிந்த அரசுக்கு ...., கேபிள் இணைப்பு கசக்கிறதோ ?. 700 கோடி ஒதுக்கிய தொகை என்னவாயிற்று ?. # வியாபார தந்திரம் என்னும் பெயரில் ... அவசியப் பொருள் பதுக்குவது , பதுக்குவதின் மூலம் செயற்கையாய் ... " தேவை அதிகரிப்பை " உருவாக்கி ..., அதை காரணம் காட்டி விலை உயர்த்தி இலாபம் பார்க்கும் வில்லங்கம் . அவசியமில்லாமல் அத்தியாவசியப் பொருட்களுக்குள் " ஆன்லைன் " வர்த்தகம் நுழையவிட்டு அதன் மூலம் விலை ஏற்றம் . இவற்றை கட்டுப் படுத்த வேண்டிய அரசும் , அதிகார வர்க்கமும் கையாலாகாமல் .... கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறீர்களா ? அன்றி ... வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு " முதலாளித்துவ முதலை " க்கு நன்றி .. காட்டுகிறீர்களா ? உங்கள் "
வாடிக்கையாளர் " விசுவாசம் பாராட்டுக்குரியது . " தேர்தல் தேவைக்கு .... உங்கள் புகலிடம் அந்த முதலைகள் . அவர்களின் திருட்டுத் தில்லுமுல்லுகளுக்கு அடைக்கலம் நீங்கள் . " நல்லக் கூட்டணி ?!!" # பாவம் ..... அப்பாவி தமிழக மக்கள் .? சுயமாய் சிந்திக்காத படி சீரியல் மயக்கமும் , சோம்பேறித் தனமும் , சோரம் போகும் புத்தியும் , கிடைத்தவரை இலாபம் ... என்ற பொறுப்பற்றத் தன்மையையும் .... நாம் தாண்டாதவரை நம் தலைஎழுத்து மாறாது ... மக்களே ...!! மாறாது . # அடிப்படை பொருட்களை விலையேற்றி விட்டது பற்றாது என்று ... இப்போது ... இலவச வீடு ? வேறு . நல்லத் திட்டம் போல் தோன்றினாலும் ...., உள்ளுக்குள் " மகா தகிடுதத்த " வேலைகள் நடப்பது தெரியாதா ? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறீர்களா ? இலவச வீடு அறிவிப்பு வந்த நாட்கள் தொட்டே கட்டுமான பொருட்களின் விலையேற்றம் எதனால் ? இது சொந்த காசு போட்டு வீடு கட்டியவன் , கட்டுபவன் நிலை என்ன யோசித்தீரா ?. # எம் . எல் . ஏக்களுக்கு எதற்கு கடற்கரை சாலையில் பட்டா மனை இலவசமாக ? அவர்கள் யாரும் வீடில்லாமல் இருக்கிறார்களா என்ன ? ஆளாலுக்கு ... ஊருக்கு ஒரு சின்ன வீடும் , பெரிய வீடுமா இருக்கிற விபரம் தெரியாதா என்ன ? ( நான் வீட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறேன் . ) மக்கள் சேவை செய்து இளைத்து ..! களைத்த ......!! எம் . எல் . ஏக்கள் ஓய்வெடுக்கும் கூடாரமா ?. " தேவைதான் ". நம்ம காமராசரையும் , கக்கனையும் , வ . உ . சி யையும் கொஞ்சம் மனசாட்சியோடு நினைத்துப் பாருங்கள் . # இவர்கள் கடற்கரையில் ஓய்வெடுத்திருந்தால் ........, இன்று தமிழகம் ....... எப்படி இருக்கும் .? உலகின் மிக கேவலமான இடமாக இருந்திருக்கும் . அவர்கள் செய்து விட்டு போன சீர்திருத்தம் ...., " நம்மை இப்படி ஆடச் சொல்கிறது .!!" . # பெரியார் , அண்ணா , காமராசர் பெயர்களை எதற்காக பயன்படுத்துகிறீர்கள் ? எந்த தகுதியில் ? ஒன்று தெரியுமா ? நம்முடைய மெட்ரிக்குலேசன் மோகத்தால் ..... இன்றைய இளம் தலைமுறைகள் ...." இவர்களை " யார் என்றே தெரியாமல் வளரும் கொடுமை தெரியுமா உங்களுக்கு ? தேசிய கீதம் , நாட்டுப் பண் பாடாத பள்ளிகள் கணக்கெடுக்க முடியுமா உங்களால் ?. # உங்களின் செயல்கள் எல்லாமே .........., இலைமறையாய் ..... உங்கள் சந்ததிகளுக்கு மட்டும் , காய் மறையாய் ......... முதலாளி முதலைகளுக்கு மட்டும் நன்மை பயக்கும் ...... என்றால் .., இது " நயவஞ்சகம் " இல்லையா ? # இனியேனும் இலவசம் நிறுத்தி ... மக்களை நல்வழிப் படுத்தி , உங்களால் முடிந்த உருப்படியான காரியம் ஆற்றுங்கள் . அது மட்டுமே உங்களை காலம் கடந்தும் வரலாற்றில் பதிக்கும் . # இறுதியாக ...... தன் ( மகனுக்கு ) சமூகத்துக்கு மீன் வாங்கித் தரும் தலைவனை விட , மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கும் தலைவனே சிறந்தவன் . ( நான் சமூகம் என்றது .. தமிழக மக்களை , குடும்பம் என்ற குறுக்குப் பொருள் கொள்ள வேண்டாம் ). இனியேனும் யோசிப்பாயா .... என் இனிய இளைய .... தலைமுறையே ...!? # கொசுராக ஒரு செய்தி .... மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கான தினக்கூலி ரூ .100. ஆனால் நடப்பது என்ன தெரியுமா ? அடித்தட்டு மக்கள் வாங்கும் கூலி ரூ .80 மட்டுமே . தலைக்கு ரூ .20 இலஞ்சம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் . இதில் பெயர் மட்டும் கொடுத்து விட்டு வேலை செய்யாமல் கூலி வாங்கும் " கிராமத்து கெத்துக்கள் " கதை வேறு . # இலவச வீட்டின் மதிப்பு ரூ .75000/- , நபருக்கு வழங்கபடுவது ரூ .60000 முதல் ரூ .65000 வரை மட்டுமே என்பது குறிப்பிடத் தகுந்தது .
உப்புலகம் உவந்து வாழும் சிப்பி உன் பூர்வீகம் வான்வெளி விட்டிறங்கும் மழை வரவேற்க வாழ்விட மிட்டேகும் சிற்றுயிர் வாய்ப்பிளந்தே வாங்கும் நன்னீர். தாழடைக்கும் கதவு ... தவம் செய்ய மெல்ல மெல்ல குடியேறும் மெருகேறும்... உருண்டு திரண்டு உலகம் காட்டும். நன்முத்தாய் வெண்முத்தாய் விளைந்து காட்டும். கால்சியப் பேழையின் காப்புரிமை உனக்கு . கடலுக்கு சொந்தமாய் நீ இருக்கும்வரை. காசுக் கலைந்தேகும் மனித மாசுக் கையில் கிடைத்திட்டால் நல்விலைக்கே வித்திட்டார். சிப்பியை சிதைக்கும் சில்லறை புத்தி முத்துக்காய் சிப்பிக்கு கல்லறை கட்டும். ரத்தினமாய் நீ...உன் பெயர் கொண்ட மானிட ரத்தினம் யார்..?
கனவு காரிகையின் நினைவுத் தூரிகை அவிழ்ந்து விழும் போதினில் கல்லடிபட்ட தேன்கூடாய் .... கலங்கிப் போகிறது மனம் . கல்லெறிந்தவனை துரத்தும் தேனீக் கூட்டமாய் அவளைத் துரத்தும் எண்ணத்தேனீக்கள் ..! தொலைதூரம் துரத்தியும் .... தோல்வியாய் திரும்பி .... சிந்தனைத் தேன்கூட்டைக் கொட்டித் தீர்க்கும் ..... எண்ணத் தேனீக்கள் ..! என்ன தேனீக்கள் ..? கல்லடிபட்டு கசிந்தொழுகும் .... சிறுசிறு தேன் துளியாய் .... அவளின் எண்ணத் துளிகள் ... இதமாய் .....!! சிந்தனைகள் சுகமாய் ...!!! தடாகத்தில் விழுந்த விண்கல்லாய் இதயத் தடாகத்தில் எழுந்த எண்ண அழுத்தங்களால் ..... எழுந்து தெறிக்கும் சிந்தனை சிதறல்கள் ....! காண்போரின் கண்ணுக்கு கவிதை வரிகள் ...!!
சின்ன சின்னதாய் பரிசு தந்து சிற்சில நேரம் இரத்தம் சிந்தி கடனாய் காதல் மடல் வாங்கி சுயமென சொல்லி வரும் காதல்..."கழிவிறக்கம்". **************************** கவிதை புகழுரை கட்டுரை யென கன்னியின் பாகம் பிரித்து இடம் சுட்டி பொருள் விளக்கம் தரும் புலகாங்கிதம்....!, காதல் வர காரணமானால்...."மதி மயக்கம்". ******************** ********** சுயமற்று சுகமற்று சிந்தை களக்கமுற்று நாயகி முன்பின் முகம் காட்டி உடலுயிர் வற்றி சுற்றித் திரிந்து...தொலைத்த வாழ்வில்...கிடைத்த காதல்... "அறியாமை". **************************** நட்பின் தங்கை, நம்பியவர் இல்நங்கை ஏற்புடை நங்கையின் காதல் மறுப்பு, பிற பெண்பால் காதல் தூண்டல், காதலியின் தோழி மீதேறும் காதல்..."துரோகம்". ****************** ********** அழகியல், புறத்தியல், தோற்றப் பின்புலம், நடத்தை, நாகரீகம், குடும்ப சௌகரியம், பேரன் காலம்வரை போதுமான பொருளாதாரம், இடம் பொருள் யாவும் பார்த்த காதல்...."சுய நலம்". ********************************
வெறித்து பார்த்த விழிகளில் வெற்றுப்பார்வை . நினைவற்றுப் போன நெஞ்சம் நிலைக்குத்தி நின்றபடி... கரமேந்திய தேனீர் கோப்பை சூட்டில் நிசம் சொன்னது நிகழ்க்காலம். பழுத் துதிரும் பழுப் பிலைக்கும் பருவத் துதிரும் பச்சை இலைக்கும்....இருக்கும் இடைவெளியாய் என் நெஞ்சகத்து இருக்கும் நினைவுதிரும் உணர்வதிரும். மிடறு மிடறாய் விழுங்கும் நினைவுகள் ... குடிப்பதாய் தோன்றும் கோப்பைத் தேனீர்...!! அம்மாவுக்கு...., நடிப்பதாய் தோன்றும் எனக்கு. நுரைத்து நின்ற தேனீர் நீர்த்து நின்றது .... கோப்பை நிரம்பும் கண்ணீரால் . நிரப்பிக் கொண்டே இருந்தது நிகழ்காலம்...! நிரம்பிய படியே இருந்தது என் இறந்தகாலம்..! நடுங்கும் கோப்பையில் நடுங்கிய எதிர்காலம் ..!! இதழ் பிரித்தால் இல்லாத மலர்போல் நினைவுகள் உதிர இல்லாத மனம். நசுக்க நசுக்க நாறும் பூவாய்... நினைக்க நினைக்க நெஞ்சம் வலிக்கும்..!. உன்னைப் போலவே ... நானும் உதிர்க்கிறேன் உணர்வை..!. ..நினைவை....! மற்றவர்க் கழகாய்...!!! உதிரும் இதழ் அழகு..உயிர்த்திறு..!. மறுபடி உதிர்க்க ...!! உன்னோடு நானுமென் நினைவும் . *********************************************************
மென்னிதழ் கவ்விய வன்னிதழ் வருடல் சுவைத் தேன் சொட்ட சுவைத்தே நுண்ணிய நுகர்ச்சித் தழுவல் சுக மென்னிய நாசிக் கேறும் கிறக்கம் . மல்லி மணமள்ளி வரும் அவள் குழல்காற்று மார்தழுவச் சொல்லித் தரும் இதழ்பிரித்த இமை மயிர் கூச்செறிய கலந்த கண்கள் செருகத் தெரியும் . சொர்க்க சுகமதில் ...! நெற்றித் திலகம் இடமாறும் இறுகப் பற்றிய கரம் உரமேறும் குழைந்த தேகம் சூடேறும் குறுங்கழுத்து வியர்வையில் குழலெழுத்து கூறும் கொக்கோகணார் இலக்கணம் . மொட்டவிழும் மோகவெடிப்பு ....! முனகல் மெட்டெழுதிப் பாடல் படிக்கும் . கட்டவிழும் காளை விட்டவிழும் காமம் பட்டவிழும் பெண்மை மொட்டவிழும் தொட்டவிழும் கூந்தல் பூச்சரியும் மார் தேன்சொரியும் இதுகாறும் கட்டிவைத்த ஆசைத்தீ எரியும் ....! ஆங்காங்கே வியர்வை நெய் வடியும் அங்கங்கள் மெய்மறக்கும் . குறுநகை கொப்பளிக்கும் கன்னக் கதுப்பில் செவ்விதழ் வண்ணத்தில் செந்நா சித்திரமெழுத மேல்கீழ் மூச்சில் மௌனப் புயல் வீசும் . கரும்பு கண்ட யானையாய் காளை ... யானை கண்ட பாம்பாய் பாவை ... முகிழ் முத்தச் சத்த மொத்த இராக முண்டோ சங்கீதத்தில் . ****************************************