Friday, December 02, 2011

”இருக்கிறேன் என் இயல்புகளில்..!”



இயல்புகளில் இயல்பை இயல்பாய் காணாது
இயலாமையின் அறியாமையில் மிகுந்து மிதந்து
இயல்பு மாறும் பேதமையை என் சொல்ல..!


இதம் தந்த உறவொன்று
இடம் மாறும் நிலைக் கண்டு
தடம் மாறா மனம் தவிக்கிறது.


எதுவுமறியா குறைமதி கொக்கரிக்கும்
எள்ளலில் எகிறி குதிக்கும் இதயம்
எப்படி உணர்த்தும் ஈடற்ற அன்பை.


மாசற்ற திரவியம் மடிமேல் கிடக்க
மதிகெட்டு திசைமாறும் எதிர்திசை பயணம் ஏன்..?
மனம் தேடும் சொந்தம் மறுகும் மாயம் ஏனோ..?


கரைமீறா கடலென அலைமோதும் காதல்
கரையேறி கரையேறி உனைத்தேடும் தேடல்
காணாது போனாலும் கண்டு நீ போனாலும்


வாராயோ என்றேதான் உன் வருகைக்கு
காத்திருக்கும் விழிகளில் விழிநீர் இடும்
விழித்திரையில் விழுந்து உடைகிறது 


உன் பிம்பம் தினம் தினம்..! மாளாத
நேசத்தை விதைத்து விட்டேன்,- மாறாத
உன் வாசத்தை சுவாசித்து வாழ்ந்து விட்டேன்.


ஓயாத அலை ஒன்று உள்ளுக்குள் அலைமோதும்
ஒவ்வொரு விநாடியும் உயிர் குடித்தே அதுவாழும்
உன்னோடு ஒன்றாக ஒன்றிய காலங்கள்...!!


முன்னும் பின்னும் எனை மூழ்கடிக்கும்
எண்ணங்களை என் சொல்ல..! - ஆடும்
உன் மனதுக்கு இரையாகும் நம் சொந்தம்.


இழக்க எதுவுமில்லாதவன் பெற்ற செல்வம் நீ.
இதயத்தால் நேசித்த எனக்கான சொந்தம் நீ.
இன்னும் இருக்கிறேன் உயிரோடு உனக்காக..!!.



6 comments:

Kayathri said...

//எள்ளலில் எகிறி குதிக்கும் இதயம்
எப்படி உணர்த்தும் ஈடற்ற அன்பை.// அன்பை அன்பு தானே உணரும்...

//இழக்க எதுவுமில்லாதவன் பெற்ற செல்வம் நீ.
இதயத்தால் நேசித்த எனக்கான சொந்தம் நீ.
இன்னும் இருக்கிறேன் உயிரோடு உனக்காக..!!.//

MANO நாஞ்சில் மனோ said...

இழக்க எதுவுமில்லாதவன் பெற்ற செல்வம் நீ.
இதயத்தால் நேசித்த எனக்கான சொந்தம் நீ.
இன்னும் இருக்கிறேன் உயிரோடு உனக்காக..!!.//

அருமையாக வேதனையை வெளிப்படுத்தி இருக்குறீர்கள் மக்கா...!!!

rajamelaiyur said...

அருமையான கவிதை

இன்று

நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

rajamelaiyur said...

//
ஓயாத அலை ஒன்று உள்ளுக்குள் அலைமோதும்
ஒவ்வொரு விநாடியும் உயிர் குடித்தே அதுவாழும்
உன்னோடு ஒன்றாக ஒன்றிய காலங்கள்...!!


முன்னும் பின்னும் எனை மூழ்கடிக்கும்
எண்ணங்களை என் சொல்ல..! - ஆடும்
உன் மனதுக்கு இரையாகும் நம் சொந்தம்.


இழக்க எதுவுமில்லாதவன் பெற்ற செல்வம் நீ.
இதயத்தால் நேசித்த எனக்கான சொந்தம் நீ.
இன்னும் இருக்கிறேன் உயிரோடு உனக்காக..!!./


/


அருமையான வரிகள்

இன்று

நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

பிரேமி said...

உண்மைதான்...எப்படி உணர்த்தும் ஈடற்ற அன்பை....!!!

cskarthikeyan said...

இழக்க எதுவுமில்லாதவன் பெற்ற செல்வம் நீ.
இதயத்தால் நேசித்த எனக்கான சொந்தம் நீ.
இன்னும் இருக்கிறேன் உயிரோடு உனக்காக..!!


Awesome lines