
மனிதா உன்னை
பிடித்திருக்கும்
மதமும் …
நீ சார்ந்திருக்கும்
மதமும் …
உன்னையும் உன்
சக மனிதனையும்
சாகடிக்குமானால்
பிறர் மனதை
நோகடிக்குமானால்
நீயும் உன்
மதமும் எதற்கு?
உனக்குள்
மதத்தின் பெயரால்
பிடித்திருக்கும் மதத்தை
நீக்கிவிட்டு
நிசமாய் நீ
ஒரு மனிதனையாவது
நேசித்து பார் !
உன் கண்களுக்கு
இறைவன் தெரிவான் ..!
உண்மையாய் ஒரு முறையாவது
இறைவனை தேடி பார் …!
உன் கண்களுக்கு
மனிதன் தெரிவான் …!!
உனக்கு உன்னையும்
புரியாமல் நீ
சார்ந்திருக்கும்
மதத்தையும் புரியாமல்
புதிதாய் பிறந்த குழந்தை
நடக்க முயற்சித்து
தடுமாறி விழுவது போல்
உன் செயல்களால் மதமும்
மதத்தின் குறைபாடுகளால்
நீயும் தடுமாறி
இரண்டுமே தவறோ
என்ற தோற்றத்தை
ஏற்படுத்திவிடுகிறீர்கள் .
ஒவ்வொரு மனிதனும்
மதம் சொல்லும்
எல்லா விசயங்களையும்
எடுத்துக் கொள்ளாவிட்டாலும்
ஒரு வழியையாவது
பின்பற்றினால் …
இந்த பூமியை விட
சொர்க்கம் என்று
சொல்லி கொள்ள
வேறு இடம் இருக்காது .
உங்களால் பின்பற்ற
முடியாத மதமும்
மதத்தை பின் பற்றாத
நீங்களும்
இந்த பூமியில் வாழ
தகுதியற்றவர்கள்.
உங்கள் பிறப்பு இந்த
மண் மீது நிகழ்ந்த
மாபெரும் தவறு .
உங்களால்தான்
உங்கள் சுய நலன்களால்தான்
இந்த பூமிக்கு கேடு .