Monday, August 24, 2009

'நீ'!



மனதின்,
மௌன சேமிப்புகளை …
தூரிகையில் மொழி பெயர்த்தேன்!
நீ!!

Sunday, August 23, 2009

"மாற்றம்"





வளர்ந்து கொண்டே இருக்கும்
ஒரு பொருளும்
தேய்ந்து கொண்டே இருக்கும்
ஒரு பொருளும்
இந்த பிரபஞ்சத்தில் இல்லை!!!.

இந்த பிரபஞ்சத்தில்
இல்லாத ஒன்று
என்னிடம் இருக்கிறது -அதுவும் …
வளர்ந்து கொண்டே இருக்கிறது !!

"என் காதல் …!!!”

"புன்னகை!"


எல்லாம் அறிந்தவனாய்
எனை உணர செய்ததும்
எதுவும் அறியாதவனாய்
எனைத் திணற செய்ததும்
கொஞ்சம் கொஞ்சம்
குழம்ப செய்ததும்
கொஞ்சம் கொஞ்சமாய்
நிரம்ப செய்ததும்
நீ காட்டும் மௌனப்புன்னகை!!!.

"புதிர்"

இந்த பிரபஞ்ச இயக்கமும்
காதலில் நீ காட்டும் தயக்கமும்
இன்னமும் புரியாத புதிர்தான் எனக்கு.

"சுவாசம்"

உன் சுவாசங்கள்
ஏற்படுத்தும் மாற்றங்கள்
என் மனதிற்குள் மையம் கொண்டு
உணர்ச்சி புயலாய் உருவெடுக்கிறது .

"மயக்கம்"


சில்லென்று ஓடும்
சிற்றோடைகளும் .. உன்
சிற்றிடை கண்டால்
சிலிர்த்து கொள்கிறது பெண்ணே !!!
தங்களுக்குள் மெய்சிலிர்த்து
விரைத்து நிற்கிறது பெண்ணே...
பனிக்கட்டியாய் ...!!

"வியப்பு!"

வானவில்லை யார்
காற்றில் பறக்க விட்டது ?!!
உன் தாவணியால்
நிகழ்ந்து விட்ட அதிசயம் கண்டு
விழிகள் வியர்க்கிறேன் நான்.

"தாக்கம்!"


பிறை நிலாக்களை வெட்டி
வீதியில் வீசியது யார்?..உன்
விரல் பிரிந்து கிடக்கும்
நக நறுக்கல்கள் கண்டு
நெஞ்சம் கொஞ்சம்
உடைந்து போகிறேன்.

"நெகிழ்ச்சி"


சீவிவிட்ட மாட்டுக் கொம்புகளை
செதுக்கி வைத்தது போல்
நெருக்கி வைத்த உன் புருவம் கண்டு
நெஞ்சம் நெகிழ்கிறேன்.

"உவகை"

இருண்டு கிடக்கும்
இப்பிரபஞ்ச பெருவெளியாய்
சுருண்டு கிடக்கும் உன்
கருங்கூந்தல் பெருவெளியை
கண்டு மகிழ்கிறேன்.

"வேட்கை!"


ஒரு வினாடி தோன்றி மறையும்
உன் உருவம் கண்டுவிட்டால்
ஒரு கோடி ஆண்டுகள்
உயிர்த் தரிக்கும்
ஆற்றல் கொள்கிறது என் மனம்.

"வேகம்!"








என் எண்ணம் செல்லும் வேகத்துக்கு
ஈடான ஒரு பொருளை …
இன்னும் இந்த
பிரபஞ்சம் காணவில்லை !!!

நூறாயிரம் முறை
சுவாசிக்க வேண்டிய காற்றை
ஒரு மூச்சில் சுவாசித்தால் வரும்
மூச்சித் திணறல் போல்
உனைக் காணும் போதெல்லாம்
எனக்குள் சிந்தனை சிதறல் …
எண்ணத் திணறல் …
கற்பனைக் கதறல் ..!

"தகிப்பு!"

என் எண்ணங்களுக்கு
ஈராயிரம் ஈனுலைகளும்
தரமுடியாத வெப்பத்தை
உன்னிரு விழிப்பார்வைகள்
தருகின்றன !!!

ஏக்க பெருமூச்சில் …
எட்டூர் எரிக்கும் …
வெப்பம் தெறிக்கிறது பெண்ணே ..!
மூளை முதல் …
முதுகு வாள்முனை வரை …
முறுக்கேறி நிற்கிறது
"என் காதல் ..!"

"வலி"







இதயம் வலிக்க
இறுக்கி பிழிந்து
இரத்தம் எடுத்து
என் நரம்புகளை நறுக்கி எடுத்து
இரத்தம் தோய்த்து
உனக்கு வர்ணமூட்டுகிறது …
என் காதல் !

Saturday, August 22, 2009

"மௌனப் புயல்"


ஒளிதரும் விளக்கின்
சுடர்விடும் தீபம் போல் இருந்த
என் காதல் …
உனை காணும் போதெல்லாம்
கனன்று கிடக்கும் நெருப்பு
சுழன்றடிக்கும் சூறாவளியால்
காட்டுத்தீயாவது போல்
என் உயிர்ப்பற்றி சுட்டெரிக்கும்
என் காதல் …!!!
மனதை எரித்து …
மனதை எரித்து …
உணர்ச்சி சாம்பல் குவித்து
உன் உருவம் செய்து
உயிர் ஊட்டுகிறது !!!

Tuesday, August 18, 2009

விதி பழித்தல் !


விதி.,
எத்தனை முறை
என்னை வீழ்த்தினாலும்
மண்ணோடு மண்ணாய்
மக்கிபோவதற்கு
மரமல்ல நான்...!
விதை! -
நான் விதை..!
வேரூன்றி வெடித்தெழுவேன்...!
வினை கிழித்து முளைத்தெழுவேன்..!
விதியையே கொம்பாக்கி அதை சுற்றிப் படர்வேன்..!
என் விளைவுகளால் விதியை மூடுவேன்..!
என் எண்ணங்களையே
வண்ண மலர்களாக்கி ,
வான் நோக்கி பூத்து சிரிப்பேன் ..!
நான் தரும் நிழலில்
விதியே வந்து இளைப்பாறு
என்பேன்.

குட்டி தேவதை

என் சிந்தனையை கூட
நிறுத்தி வைக்கும்
உன் சின்ன விழிப்பார்வை..!!!
சீறிபாயும் மின்னலை
சிறைபிடிக்கும் கலையை
எங்கே கற்றன உன் கண்கள் ?..!
**********************
கடவுளுக்கும், கருணைக்கும்
உன் கண்களே சாட்சி.
எரிமலையும் குளிர்ந்துவிடும்
எழில் கோலம் நீ..!!
எந்த நந்தவனமும்
பிரசவிக்காத மலர் நீ…!
*************************
அணுசக்தி அமைதிகொள்ளும்
உயிர்சக்தி நீ…!
ஆற்றல்கள் ஒளிந்துகொள்ளும் ஆழி இருள் …
உன் கருவிழி...!!
**********************************
பேதமுற்று கிடக்கும்
பெரிய மனிதருக்கு
அமைதி போதிக்க வந்த
அழகு நீ..!
**********************************
அல்பிரேட் நோபெலுக்கு-
நீ பிறந்திருந்தால் …
இந்த உலகம் அழிந்திருக்காது …!
நியூட்டன் உனைக்கண்டிருந்தால்
ஆப்பிள் கண்டு அதிசயித்திருக்கமாட்டான் ...!
அலெக்ஸ்சாண்டர் உன்னை பார்த்திருந்தால்
அமைதி கொடி ஏந்தியிருப்பான்...!
**********************************